நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 23 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா- அழைப்பிதழ்





நாள்: 29.03.2014 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 4 மணி

இடம்: அமரர் கோ. தியாகராசன் அரங்கம், மீரா மகால்,
குருகாவலப்பர் கோயில்,  கங்கைகொண்ட சோழபுரம் (அஞ்சல்).

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் பொற்கோ அவர்கள்
(மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)

வரவேற்புரை: சித்தாந்த ரத்தினம் பழமலை கிருட்டினமூர்த்தி அவர்கள்

நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

குற்று விளக்கேற்றல்: பொறியாளர் குந்தவை கோமகன் அவர்கள்

இசையரங்கு:

திரு. இரா. சுகுமார்
திரு. சு. அருண்குமார்
 திரு. மு. சனார்த்தனன்  
திரு. . மணிகண்டன் குழுவினரின் நாகசுர இன்னிசை

பண்ணிசை:இசைக்கலை சோதிஇரா. கல்பனாதேவி அவர்கள்

தமிழிசைப் பாடல்கள் திரு. . திருவுடையான் அவர்கள்

தமிழ்ச்சங்கப் பெயர்ப்பலகையைத் திறந்துவைத்துத் தமிழறிஞர்களைச் சிறப்பித்தல்

முனைவர் கா. மு. சேகர் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு.

தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சிறப்பித்தல்
முனைவர் அருள் நடராசன் அவர்கள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு அரசு

வாழ்த்துரை:

முனைவர் வி. முத்து அவர்கள் ( தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)
முனைவர்.கோ.குலோத்துங்கன் அவர்கள்(ஆசிரியர்- கண்ணியம்)
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்
பேராசிரியர் .இராமசாமி அவர்கள்
பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள்
திரைப்பா ஆசிரியர் பா.விஜய் அவர்கள்
பொறியாளர் தமிழ்நாடன் அவர்கள், பொங்குதமிழ் மன்றம், குவைத்து
முனைவர் அரங்க. பாரி அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
திரு. பூ. சரவணன் அவர்கள் ( திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்)
திரு. பொதிகைத் தென்னவன் அவர்கள்

நன்றியுரை: திரு. கா.செந்தில் அவர்கள்

அன்புடன் அழைத்து மகிழும்:

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம்

தமிழ்மாளிகை, கீழைச் சம்போடை, கங்கைகொண்டசோழபுரம் (அஞ்சல்),
உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம், 612 901

தொடர்புக்கு: 94420 29053 / 99439 53653

வெள்ளி, 21 மார்ச், 2014

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரியில் நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு



       உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.  உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளைப் பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துள்ளது.

 உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்!  மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் இணையம் குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைய உள்ளனர். இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 

இந்த மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் நடைபெறும். உலகின் பல பாகங்களிலிருந்தும் 300 மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாட்கள் குறித்த செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் (http://home.infitt.org/) வெளியிடுவோம்.  மேலதிகச் செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உத்தமத்தின் முன்னாள் செயல் இயக்குநர் மணியம்(சிங்கப்பூர்), புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர் மு.இளங்கோவன் இந்தச் செய்திகளைத் தெரிவித்தனர்.