நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 7 டிசம்பர், 2011

திண்டுக்கல்லில் தழிழும் இணையமும் ஒரு நாள் பயிலரங்கு

நாள்: 14.12.2011 இடம் : அமைதி கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் 

நிகழ்ச்சி நிரல் 

 தொடக்க நிகழ்சி 10.00 – 10.45 
 வரவேற்புரை : திரு.தேவதயான் முதல்வர் - அமைதி அறக்கட்டளை 

தலைமை : திரு.ஜே.பால்பாஸ்கர் தலைவர் அமைதி அறக்கட்டளை 

சிறப்பு விருந்தினர் : முனைவர் மு.இளங்கோவன் துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி 

அறிமுகஉரை : திரு.சு.பாரதிதாசன் செயலாளர், அருளகம் 

முன்னிலை : திருமதி.மெர்சி பாஸ்கர் முதல்வர் அமைதி தொழிற்பள்ளி

கருத்தாளர் முனைவர் மு.இளங்கோவன் 

முதல் அமர்வு 10.46-12.00 இரண்டாம் அமர்வு 12.01 – 01.00 மூன்றாம் அமர்வு 02.00 – 03.00 நான்காம் அமர்வு 03.01 – 03.45  

கருத்துரை 3.46 – 04.00 பங்கேற்பாளர்கள் 

தொடர்புக்கு: சு. பாரதிதாசன், 9843211772

வெள்ளி, 2 டிசம்பர், 2011

சீன வானொலியில் முனைவர் மு.இளங்கோவன் நேர்காணல் முதல்பகுதி ஒலிபரப்பு…

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் நேர்காணல் இன்று(02.12.2011) இரவு சீன வானொலியில் உங்குள் குரல் பகுதியில் ஒலிபரப்பானது. கவி.செங்கெட்டுவன் அவர்கள் நேர்காணல் செய்தார். சில மாதங்களுக்கு முன்பு ஊற்றங்கரையில் இந்த உரை செல்பேசியில் பதிவு செய்யப்பெற்றது. இன்று ஒலிபரப்பு செய்த சீன வானொலி நிலையத்தாருக்கும், நேர்காணல் செய்த கவி.செங்குட்டுவன் ஐயா அவர்களுக்கும் நன்றி.(இந்த உரை அடுத்த வாரம் முழுமையாக என் பக்கத்தில் இடம்பெறும்).

மு.இளங்கோவனின் இளமைக்கால வாழ்க்கை,இலக்கியம், இணையம், நாட்டுப்புறவியல் சார்ந்த பல செய்திகள் இந்த நேர்காணலில் இடம் பெற்றுள்ளன.

நீங்கள் கேட்டு மகிழவேண்டுமா?

தங்கள் கணினியில் ரியல் பிளையர் என்ற மென்பொருள் இருந்தால் இனிமையாகக் கேட்க முடியும். http://tamil.cri.cn/ என்ற பக்கம் செல்லவும்.இறுதி நிகழ்ச்சி என்னும் பகுதியைச் சொடுக்கவும். முன்னதாகச் சில நிகழ்வுகள் இடம்பெறும். அரை மணிநேரத்திற்கு அடுத்து மு.இளங்கோவனின் உரையைக் கேட்க முடியும். இரண்டாம் பகுதி அடுத்த வாரம் ஒலிபரப்பாக உள்ளது.