நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) புதிய விளைச்சல்!

 


ஆசிரியர் திருநாளில் அறிமுகம் செய்கின்றோம்.

தொல்காப்பியத் தொண்டர் ஒருவரின் மறைந்து கிடந்த வாழ்வியலை - தமிழ்ப்பணிகளை நூல்வடிவில் இத்தமிழுலகின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

பக்கம்: 144

விலை: 200 உருவா

தொடர்புக்கு: muetamil@gmail.com

புலனம்: +91 9442029053

சனி, 30 ஆகஸ்ட், 2025

தொல்காப்பியச் செம்மல் தமிழண்ணல் அவர்களின் 97 ஆம் பிறந்தநாள் விழா!


 சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு அரசின் பொதுநூலகத் துறையால் அமைக்கப்பட்டுள்ள,உலகம் சுற்றிய தமிழர் சோமலெ நினைவு - கிளை நூலகம்” சார்பில் 31.08.2025(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.29 மணிக்குத் தொல்காப்பியச் செம்மல் தமிழண்ணல் அவர்களின் 97 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது. 

 “படிப்போம் பகிர்வோம்” என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில் விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தமிழண்ணலின் இனிக்கும் இலக்கியம் குறித்து, கலந்துரையாட உள்ளனர். 

 முனைவர் மு. இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, இணையத்தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவும், சோமலெ அறக்கட்டளை நிறுவுநர் சோமலெ சோமசுந்தரம் அவர்கள் தமிழண்ணல் குறித்த நெகிழ்வுரையாற்றவும் உள்ளனர். 

 தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.