நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஏப்ரல், 2012

திருவள்ளுவர் திருநாள்


அறிக்கை 1-1


அறிக்கை 1-2


அறிக்கை 2-1


அறிக்கை 2-2

திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு விரிவாகத் திட்டமிட்டு 1935 இல் தமிழறிஞர்கள் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர் என்பதைச் செந்தமிழ்ச்செல்வி இதழ் வாயிலாக அறியமுடிகின்றது. திருவள்ளுவர் ஆண்டுவிழா குறித்த வேறு சில துண்டுச்செய்திகளும் இதழில் காணப்படுகின்றன. இரண்டு அறிக்கைகளையும் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

நன்றி: செந்தமிழ்ச்செல்வி, கழக வெளியீடு

2 கருத்துகள்:

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மிக்க நன்றி. செந்தமிழ்ச் செல்வி பழைய இதழ்களில் மறைமலை அடிகளார் தலைமையில் திருவள்ளுவராண்டு நிறுவிய செய்திகளைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. திருவள்ளுவர் நாள் அறிவிப்பும் கூட தை முதல் நாள் இல்லையே? வைகாசி 5 (மே 18) என்றல்லவா குறித்திருக்கிறார்கள்? மறைமலை அடிகளார் குழு 1921லேயே திருவள்ளுவர் ஆண்டு நிறுவியிருந்தால், ஏன் 1935ல் வைகாசி 5த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம் ஐயா
உரிய ஆவணங்களைத் தேடிவருகின்றேன். கிடைத்தவற்றை இணையத்தில் பார்வைக்கு வைத்தால் அனைவருக்கும் பயன்படும் என்று பதிகின்றேன். தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி