நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 ஏப்ரல், 2012

புதுச்சேரியில் பாவேந்தர் விழா

புதுவையில் அமைந்துள்ள புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் இன்று(28.04.2012) மாலை 7 மணி அளவில் பாவேந்தர் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.முத்து அவர்களின் தலைமையில் விழா சிறப்புடன் நடந்தது.

பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பாவேந்தரின் மகன் தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார் புதுச்சேரி அரசு கொறடா திரு.கோ.நேரு அவர்கள் பாராட்டுரை வழங்கப், பாவேந்தரின் பெயரன் திரு.கோ.பாரதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன் அவர்கள் பாவேந்தரின் கவிதைச்சிறப்பு குறித்து அரிய சொற்பெருக்காற்றினார். உலகத்துக் கவிஞர்களின் கவிதைகளிலிருந்து பாவேந்தர் கவிதை மேம்பட்டு நிற்பதைத் திறம்பட எடுத்துரைத்தார். ஒரு மணி நேரம் நிகழ்ந்த அரிய உரையில் புதுவைத் தமிழன்பர்கள் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.


சிறப்பு விருந்தினருக்கு நூல்பரிசு வழங்கும் காட்சி: திரு.தனசேகரன், .தி.இராசகோபாலன், வி.முத்து, மன்னர்மன்னன், கோ.பாரதி உள்ளிட்டோர்


தமிழ்மாமணி மன்னர்மன்னன் உரை


கல்விச்செம்மல் வி.முத்து தலைமையுரை



பேராசிரியர் தி.இராசகோபாலன் உரை

கருத்துகள் இல்லை: