நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி இணையப்பயிற்சி வகுப்பு நிறைவு...

இன்று(18.12.2009 ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையப்பயிலரங்கம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.பள்ளித்தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.திரு.செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
உதவித்தலைமையாசிரியர்கள் திருவாளர்கள் எம்.சி.செயபால்,ஆர்.தருமலிங்கம்,கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கணிப்பொறித்துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் 100 பேர் தமிழ் இணைய அறிமுகம் பெற்றனர்.தமிழ்த்தட்டச்சு,கூகுள் நிறுவனப்பயன்பாடு,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிமுகம் பெற்றனர்.மின்னிதழ்கள் உள்ளிட்ட பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கணிப்பொறி ஆசிரியர் கே.பி.உமாமகேசுவரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நான் காட்சி விளக்கத்துடன் உரையாறினேன்.

1 கருத்து:

செல்வமுரளி சொன்னது…

எங்கள் பகுதியில் இணைய பயிலரங்கு நடத்திய முனைவர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்