நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 டிசம்பர், 2009

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இடம்: வேல்.சொக்கநாதன் திருமண மண்டபம்,புதுச்சேரி
நாள்: திசம்பர் 18-27

கண்காட்சியில் 94 முன்னணிப் பதிப்பாளர்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ்,ஆங்கிலம்,இந்தி,பிரஞ்சு மொழி நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

உருவா 200-00 மேல் நூல் வாங்குபவர்களுக்குப் பரிசு அட்டை வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு உரிய கழிவு வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

18.12.2009 மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறையின் அமைச்சர் மாண்புமிகு மு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். இவ் விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்தியலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.மேனாள் கல்வியமைச்சர் திரு க.இலட்சுமிநாராயணன் அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார்.தோழர் இரா.விசுவநாதன் அவர்கள் வாழ்த்துரையும் திருவாட்டி பி.தமிழரசி அவர்கள் பாராட்டுரை வழங்கவும் உள்ளனர்.

25.12.2009 இல் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றவும் மேனாள் கல்வியமைச்சர் திரு.க.இலட்சுமி நாராயணன் அவர்கள் தலைமை தாங்கவும் உள்ளனர்.

27.12.2009 இல் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே.ஆர்.அனந்தராமன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்துகொண்டு கண்காட்சியில் தேவையான நூல்களை வாங்கலாம்.


ஏற்பாடு
புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கம்,புதுச்சேரி-8
தொடர்புக்கு 98423 30358,94447 76733

கண்காட்சி நேரம்
அலுவலக நாளில் பிற்பகல் 2.00-முதல் இரவு 9.00 மணி வரை
விடுமுறை நாளில் முற்பகல் 11.00-முதல் இரவு 9.00 மணிவரை

கருத்துகள் இல்லை: