நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ் இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சென்னையில் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம்


மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூா், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம் சென்னை,  எத்திராசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. தமிழ்க் கணினி, தமிழ் இணையம் குறித்து    அறிய விரும்பும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

  நாள் : 06.01.2014                            நேரம் : முற்பகல் 10.30 மணி

இடம் : எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை    
 
தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல்

நேரம் : முற்பகல் 10.30 முதல் 11.55 வரை.

தமிழ்த் தாய் வாழ்த்து.

வரவேற்புரை:    முனைவா் கா.மு.சேகா், தமிழ் வளா்ச்சி இயக்குநா், சென்னை.

கருத்தரங்க விளக்கவுரை:    முனைவா் மூ.இராசாராம்...,அவா்கள், அரசுச் செயலாளா்தமிழ் வளா்ச்சி  மற்றும் செய்தித்துறை.                                                 
கருத்தரங்கினைத் தொடங்கி வைத்துத் தலைமையேற்று விழாப்பேருரை:  
 
மாண்புமிகு கே.சி.வீரமணி அவா்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்.

சிறப்புரை :   திரு.தா.கி.இராமச்சந்திரன் ..., அரசுச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறைசென்னை

கருத்துரை  :   
திரு. அதுல் ஆனந்த் ..., அவா்கள்  மேலாண்மை இயக்குநர்தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), சென்னை

முனைவா் கோ.விசயராகவன், இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முனைவா் .அருள்இயக்குநர், மொழி பெயா்ப்புப் பிரிவு,    தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை,   சென்னை.

நன்றியுரை  : முனைவர் .பசும்பொன்,  தனி அலுவலா்(பொஉலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.

கருத்தரங்க அமா்வுகள் தொடக்கம்
முதல் அமா்வு : முற்பகல் 11.55 முதல் 1.15 வரை

தலைமை     :   .திரு.வே.மா.முரளிதரன், நிருவாகக்குழுத் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரிமற்றும் முதன்மைச் செயலாக்க அதிகாரி, குளோபல், பகவான்                  சைபா்டெக் குழு, சென்னை.

கட்டுரையாளா்கள் :

1.கணினித் தமிழ் வளா்ச்சி இன்றைய நிலை - பேரா..தெய்வசுந்தரம் சென்னை
2.கணினித் தமிழ் ஆய்வும் இணையப் பயன்பாடும் - பேரா.மா.கணேசன், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.

பிற்பகல் 1.15 முதல் 2.00 வரை உணவு இடைவேளை

இரண்டாம் அமா்வு: பிற்பகல்: 2.00 முதல் 4.00 வரை

தலைமை : பேரா..தெய்வசுந்தரம், சென்னை.

கட்டுரையாளா்கள்
1.தமிழில் பேச்சுத் தொழில்நுட்பம் - பேரா...ராமகிருட்டிணன் , இந்திய அறிவியல் கழகம், பெங்களுரு.
2.இன்றைய பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள்கள் - திரு.இல.சுந்தரம்,   இராமசாமி நினைவுப் பல்கலைக் கழகம், சென்னை.
3.தமிழ் இணையம் இனி அனைவருக்கும்பேரா.கிருட்டிணமூா்த்தி,   அண்ணா பல்கலைக் கழகம் (ஓய்வு), சென்னை
4.பன்மொழி எழுத்துக்களுக்கான மாற்று விசைப் பலகைதிரு.தி.வாசுதேவன்சா்மா சொலியூசன்ஸ் அண்ட் புராடக்ஸ், புதுக்கோட்டை.
5.தமிழ் அறிதியியல் – (Tamil informatics) திரு.நாக.இளங்கோவன், அறிவியல் வல்லுநர், சென்னை.

மூன்றாம் அமா்வு: பிற்பகல் 4.00 முதல் 5.00 வரை

தலைமை     :   திரு.மாஃபா.. பாண்டியராசன், நிறுவனா், மனிதவள மேம்பாட்டு அமைப்புசட்டமன்ற உறுப்பினா், விருதுநகா்.

கட்டுரையாளா்கள் :

1.தமிழ் இணையம் வளா்ச்சியும் வாய்ப்பும்- பேரா.மு.இளங்கோவன், புதுச்சேரி.
2.இணையத் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும்கவிஞா்.தங்க. காமராசு, சென்னை.
3.தமிழில் திறவூற்று மென்பொருள்கள் -திரு..செந்தில்குமரன், லினரோ, கேம்பிரிட்சு.

கலந்துரையாடல்  :   பங்கேற்பாளர்கள்.

நன்றியுரை    :  பேரா.சோதி குமாரவேல், முதல்வர் எத்திராசு மகளிர் கல்லூரி.


  நாட்டுப்பண்

சனி, 12 ஜனவரி, 2013

தமிழ் இணைய அறிமுகம் நிகழ்ச்சி தொடங்கியது...

இணைய அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தமிழார்வலர்கள்


திருச்சிராப்பள்ளி, பெரியார் கல்வி வளாகத்தில் இன்று(12.01.2013) காலை 10 மணியளவில் தமிழ் இணையம் அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது. மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கி நடைபெறுகின்றது. திரு.வா.நேரு அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளியிலிருந்து தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர்.தமிழ் இணைய அறிமுகம் நிகழ்ச்சி தொடங்கியது...


மருத்துவர் சோம.இளங்கோவன் (தலைமையுரை)

தமிழ் இணையம் பற்றி கலந்துரையாடல்

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சென்னையில் த.மு.எ.க.சங்கம் சார்பில் தமிழ் இணையம் அறிமுகம்


பார்வையாளர்கள்

சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிறுவனத்தில்(புதுச்சேரி விருந்தினர் இல்லம் அருகில்) த.மு.எ..க. சங்கம் சார்பில் தமிழ் இணையம் அறிமுகம் 28.08.2011 பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்றது.வகுப்பிற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் வந்திருந்தனர். இவர்களுள் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. த.மு.எ.க.சங்கம் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம், தமிழ்த்தட்டச்சு, பயனுடைய இணையதளங்கள், வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியா, நூலகம் சார்ந்த தளங்களை அறிமுகம் செய்தேன். பலருக்கு மின்னஞ்சல் உருவாக்கும் பயிற்சியையும் வழங்கினேன்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைத் தோழர் இலக்கியா வரவேற்று, நிகழ்ச்சி பற்றிய அறிமுகம் செய்தார். தோழர் பாரதிகண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

என் மாணவர் பிரேம் அவர்கள் வந்திருந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்.

பார்வையாளர்கள்


ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதிகண்ணன்


வரவேற்புரையாற்றும் தோழர் இலக்கியா


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்

என் இணையம் கற்போம் உள்ளிட்ட நூல்கள் இனி சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து திரும்பினேன்.

டிஸ்கவரி புக் பேலசு (DISCOVERY BOOK PALACE),
எண் 6, மகாவீர் காம்பளக்சு, முதல்மாடி,
முனுசாமிசாலை,
கலைஞர் கருணாநிதி நகர் (மேற்கு),
சென்னை 600 078

பேசி: 044 - 6515 7525
செல்பேசி: 994044650

மின்னஞ்சல்: discoverbookpalace@gmail.com

செவ்வாய், 17 மே, 2011

ஆர்க்காட்டில் தமிழ் இணையம் அறிமுகம்

வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் ஆர்க்காடு கிளையின் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் இணையம் அறிமுக வகுப்பு நடைபெறுகின்றது.

ஆர்க்காடு,சோளிங்கர்,இராணிப்பேட்டை,வாலாசா,வேலூர்,ஆரணி பகுதிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து தமிழ் ஆசிரியர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு, வலைப்பூ உருவாக்கம், இணைய நூலகங்கள், இணையவழித் தமிழ்க்கல்வி உள்ளிட்ட செய்திகளை எடுத்துரைக்க உள்ளார்.

இடம்: ஆர்க்காடு

நாள்: 18.05.2011

நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை

தொடர்புக்கு: கு.வ.மகேந்திரன் பேசி: + 8973038567

புதன், 11 மே, 2011

தில்லித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் இணையம் குறித்த கலந்துரையாடல்


தில்லித் தமிழ்ச்சங்கம்

தில்லித் தமிழ்ச்சங்கம்அறுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தலைநகரில் சீரிய தமிழ்ப்பணியைச் செய்து வருகின்றது. பேராசிரியர் சாலை இளந்திரையன் உள்ளிட்ட அறிஞர்கள் வழியாகத் தில்லித் தமிழ்ச்சங்கம் பற்றி முன்பு அறிந்துள்ளேன். நான் குடியரசுத்தலைவர் விருதுபெறச் செல்லும்பொழுது அந்தச் சங்கத்தில் தமிழன்பர்களைச் சந்தித்துத் தமிழ் இணையம் பற்றி உரையாடுவதற்குரிய ஒரு வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். என் விருப்பத்தை வடக்கு வாசல் ஆசிரியர் திரு. பென்னேசுவரன் அவர்களிடம் தெரிவித்தேன்.அவர் தில்லித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிடம் பேசி அதற்குரிய ஒரு வாய்ப்பை உருவாக்கினார்கள். தொலைபேசி,மின்னஞ்சல் வழியாக நிகழ்ச்சி உறுதிசெய்யப்பெற்றது.

திட்டமிட்டபடி 05.05.2011 மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நடத்த எண்ணியிருந்தோம். ஆனால் குடியரசுத்தலைவர் மாளிகையில் எனக்குரிய கடமைகளை முடித்துத் திரும்ப மணி ஆறு முப்பது ஆனது. ஏழுமணியளவில் தில்லித் தமிழ்ச்சங்கம் அடைந்தோம். இதன் இடையே தில்லிப் பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் திரு.கிருட்டினசாமி சான் சுந்தர் அவர்கள் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்கள்.

தமிழ்ச்சங்கத்தில் வடக்குவாசல் ஆசிரியர் திரு.பென்னேசுவரன், திரு.கிருட்டினமூர்த்தி (தலைவர்), திரு. சக்திபெருமாள் உள்ளிட்ட அன்பர்கள் இருந்தனர். திரு.பென்னேசுவரன் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் தொடங்கியது.முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர். வலைப்பதிவர் கயல்விழி உள்ளிட்டவர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.இராசகோபால் அவர்கள் வருகை தந்திருந்தார். புலவர் இரா.விசுவநாதன் உள்ளிட்ட தமிழார்வலர்களும் கலந்துகொண்டனர்.

என் கல்வியார்வம், தமிழார்வம், தமிழ் இணையத்துறையில் என் முயற்சி, ஊர்தோறும் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதன் நோக்கம்,தமிழ் இணையம் வளர்ந்துள்ள வரலாறு, தமிழ் இணையத்துக்கு உழைத்தவர்கள்,பங்களித்தவர்கள் பற்றி எடுத்துரைத்தேன். இணையத்தைப் பயன்படுத்தித் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நினைவுகூர்ந்தேன்.இணையம் சார்ந்த பல செய்திகளைப் பரிமாறினேன்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்கள் பலரும் பல வகையான வினாக்களை எழுப்பிக் கலந்துரையாடலைச் சுவையானதாக மாற்றினர். இணையம் தொடர்பான விரிவான ஒரு பயிலரங்கை நடத்த வேண்டும் என்று செயலாளர் சக்தி பெருமாள், தலைவர் கிருட்டினமூர்த்தி, வடக்குவாசல் ஆசிரியர் பென்னேசுவரன் ஆகியோர் குறிப்பிட்டனர். தில்லியில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தில்லியில் பல வலைப்பதிவர்களை உருவாக்குவது காலத்தில் தேவையாகும். அதற்குரிய முயற்சிகளில் தில்லி வாழும் தமிழ் அன்பர்கள் முயற்சி செய்ய வேண்டுகின்றேன்.


திருவள்ளுவர் சிலையுடன் காட்சிதரும் தமிழ்ச்சங்கம்(சான்சுந்தர்,மு.இ)

கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் தில்லித் தமிழன்பர்கள்


மு.இ உரையாடல்


சான்சுந்தர் அவர்கள் கருத்துரை வழங்குதல்


மு.இ, பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் சான்சுந்தர்


மு.இ. கலந்துரையாடல்

புதன், 30 மார்ச், 2011

கோவை மரபின்மைந்தன் முத்தையா அலுலகத்தில் தமிழ் இணையம் அறிமுகம்


இணையம் பற்றிய கலந்துரையாடல்

கோவைத் தமிழ்ப்படைப்பாளர்கள் இணைந்து இலக்கியச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.30.03.2011 மாலை ஆறு முதல் 8.30 வரை நடந்தது.எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,செம்பியன் வல்லத்தரசு,மரபின் மைந்தன்முத்தையா,யாழி,இளங்கோவன்,விசயராகவன், இரவீந்திரன்,புதின ஆசிரியர் கனக தூரிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.தமிழ் இணையம் சார்ந்த செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

சனி, 26 மார்ச், 2011

அரியூர் இந்தோச்சா அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


பள்ளியின் தோற்றம்

புதுச்சேரி மாநிலம் அரியூர் இந்தோச்சா அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் செய்யும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. அருள்மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கினார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் தமிழ் இணையத்தை அறிந்துகொண்டனர். பள்ளியின் முதல்வர் இரஞ்சிதம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்
முழுமையாக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.



முதல்வர் உடன்பிறப்பு(சகோதரி) இரஞ்சிதம், மு.இளங்கோவன்,அருள்மூர்த்தி






பங்கேற்ற மாணவர்கள்


பங்கேற்ற மாணவிகள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம்


அழைப்பிதழ்

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியின் இலக்கிய மன்ற விழா இன்று(15.02.2011) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழால் இணைவோம்:இணையம் கற்போம் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கி மாணவர்களுக்கு உரையாற்ற உள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

நாள்:15.02.2011
நேரம்: பிற்பகல் 2.30
இடம்: கல்லூரி வளாகம்

வரவேற்புரை: ந.கோதை அவர்கள்
முன்னிலை: முனைவர் அ.திருநாவுக்கரசு அவர்கள்(முதல்வர்)
வாழ்த்துரை: சிவத்திரு வழக்கறிஞர் குமார சிவ. இராசேந்திரன் அவர்கள் (செயலாளர்)
சிறப்புரை முனைவர் மு.இளங்கோவன்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணைய அறிமுக விழாவும், தமிழ்த்தாத்தா உ.வே.சா.தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழாவும் 12.02.2011 காரி(சனி)க் கிழமை பிற்பகல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பிற்பகல் 2.00 மணிக்குத் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் அவர்கள் நிகழ்ச்சி பற்றியும், இணையத்தின் தேவை பற்றியும் எடுத்துரைத்தார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சி பற்றியும் தேவை பற்றியும் மாணவியர் பயன்பெறும் வகையில் காட்சி விளக்கத்துடன் உரை நிகழ்த்தினார்.

தமிழ்த்தட்டச்சு தொடங்கி, தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கினார். ஸ்கைப் வசதியைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் உரையாடமுடியும் என்ற வாய்ப்பையும் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூரில் உள்ள உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு.மணியம் அவர்கள் இணைய இணைப்பில் வந்து மாணவியர்களுக்குத் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கிச் சிறிது நேரம் ஊக்க உரை வழங்கினார். இரண்டே முக்கால் மணி நேரம் தமிழ் இணைய அறிமுகம் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஆசிரியர்களுக்கும் இந்த உரை மிகுதியும் பயன்பட்டது. நிறைவில் பயன்பெற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மாலை 5 மணிக்குப் பள்ளியின் வளாகத்தில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா நடைபெற்றது. திரு.நாகரத்தினம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திரு. பஷீர் அவர்கள் முன்னிலையேற்றார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பும் நடைபெற்றது.

இன்றைய கல்வி, பொருளாதார வளர்ச்சி சமூகத்தின் சமயம் / கலாச்சாரம்/ தாய்மொழி இவற்றை மேம்படுத்துகின்றதா? சீரழிக்கின்றதா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் மாணவியர்கள் கலந்துகொண்டு உரை வழங்கினர். முனைவர் மு.இளங்கோவன் நடுவராக இருந்து மாணவியர்களின் கருத்துகளைச் சீர்தூக்கி இன்றைய கல்வியும் பொருளாதாரமும் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்தாலும் மக்களை இவைச் சீரழித்து வருகின்றன என்ற தீர்ப்புரையை வழங்கினார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழன்பர் திரு.முஸ்தபா அவர்கள் நிகழ்ச்சி சிறப்புறத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார்கள்.


சிங்கப்பூர் மணியம் அவர்களுடன் ஸ்கைப்பில் உரையாடும் 
இரகமத் பெண்கள் பள்ளியின் மாணவி


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்,ஆசிரியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்,ஆசிரியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்


உ.வே.சா.தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா

புதன், 22 டிசம்பர், 2010

புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுக விழா

புதுச்சேரியில் அமைந்துள்ள கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று (22.12.2010) காலை
9 மணி முதல் 11 மணி வரை தமிழ் இணையம் பற்றிய அறிமுக விழா
நடைபெற உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம் நிகழ்வும்-படங்களும்


அரங்கில் முதல்வர்,கல்லூரிச்செயலர்,மு.இளங்கோவன்


ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் இளங்கலைத் தமிழ்ப்பட்ட வகுப்புத் தொடங்கப்பட உள்ளதை உறுதிசெய்தல்


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெறுவதற்கான அழைப்பினைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவராஜி அவர்கள் முன்பே மடல்வழித் தெரிவித்தார்.30.09.2010 இல் நடத்த முதலில் திட்டமிட்டோம்.அன்று நாடு முழுவதும் 144 தடை ஆணை இருந்ததால் எங்கள் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 07.10.2010 அன்று நாடத்தலாம் என்று உறுதிசெய்தோம். அதன்படி காலை 10.30 மணிக்குப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். பயிலரங்கத் தொடக்கத்தில் நூற்றாண்டுப் பழைமையுடைய இக்கல்லூரியில் பணியாற்றியவர்கள் பலரும் உலக அளவில் புகழ்பெற்ற பேராசியர்களாக விளங்கியதையும்,இக்கல்லூரியில் பயின்றவர்கள் உலக அளவில் புகழ்பெற்றவர்களாக விளங்குவதையும் எடுத்துரைத்து இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலுவதற்கு உரியவகையில் இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் வகுப்பைத் தொடங்க வேண்டும் என்று பணிவுடன் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

கல்லூரியின் முதல்வரும்,கல்லூரியின் துணைச்செயலும் கூடியிருந்த அவையில் இக்கோரிக்கை வைக்கப்பட்டதும் கல்லூரியின் துணைச்செயலர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் மேடையில் தோன்றி அடுத்த ஆண்டு முதல் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப் பட்ட வகுப்பு தொடங்கப்படும் என்ற அறிவிப்பைச் செய்தார்கள்.அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற தமிழ்த்துறையினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் ‘தமிழும் இணையமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மு.இளங்கோவன் தமிழ் இணையத்தின் வளர்ச்சி,வாய்ப்புகளைச் செய்முறை வழியாக எடுத்துரைத்தார்.

முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றினார்.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு தமிழ் இணைய அறிவுபெற்றனர். இணையத் தமிழன்பர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா


கல்லூரித் துணைச்செயலாளர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள்


பேராசிரியர் சிவராஜி அறிமுக உரை


வினாக்களை எழுப்பி ஐயம் போக்கிக்கொள்ளும் மாணவர்கள்


இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு வர உள்ளதைக் கொண்டாடும் பேராசிரியர்கள்


மு.இளங்கோவன்


அரங்கு நிறைந்த மாணவர்கள்


நன்றியுரை

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இனிதே நிறைவுற்ற திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ் இணைய அறிமுக விழா


தூய நெஞ்சக் கல்லூரி

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற்றது. தூய நெஞ்சக்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என 75 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


முனைவர் மரியசூசை அடிகளார்(முதல்வர்)

கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை அவர்கள் தலைமை தாங்கினார்.மாணவர்களுக்குத் தட்டச்சுப் பயிற்சியின் தேவை,கணிப்பொறி,இணையத்தின் தேவையை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அருட்தந்தையார் அவர்கள் எடுத்துரைத்தார். கு.கலையரசி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்ற்றார். பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் நிகழ்ச்சி பற்றியும் ,நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் பற்றியும் அறிமுகவுரையாற்றினார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற்றினார்.தமிழ் இணையம் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து தமிழ் இணையத்துக்கு உழைத்த அறிஞர் பெருமக்களை நினைவூகூர்ந்தார்.சிங்கப்பூர் கோவிந்தசாமி,யாழன் சண்முகலிங்கம், உமர்தம்பி, முரசு முத்தெழிலன்,பாலா பிள்ளை,முகுந்து,கோபி,காசி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தமிழ் இணையத்துறைக்கு ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார்.

தமிழ் சார்ந்த தளங்களான மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, நூலகம் தளம்,சுரதா,தட்சு தமிழ்,தமிழன் வழிகாட்டி,சங்கமம் லைவ்,தளவாய் சுந்தரத்தின் வலைப்பூ தளம் உள்ளிட்ட பல தளங்களின் சிறப்பை எடுத்துரைத்து ஒவ்வொரு தளத்தின் தனித்தன்மைகளையும் எடுத்துரைத்தார். பங்கேற்றவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சுக்கு உதவும் குறுவட்டுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.தொடக்கத்தில் அனைவருக்கும் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பை விளக்கும் படப்படி வழங்கப்பட்டது. மாணவர்கள் தட்டச்சுப் பழகப் பத்து நிமையத்தில் பழகிக்கொள்ள முடியும் என்று கூறித் தமிழ் 99 பலகையின் அமைப்பு அனைவருக்கும் விளக்கப்பட்டதால் இனி அவர்கள் எளிதாகத் தட்டச்சுப்பழக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பேராசிரியர்கள் பொன்.செல்வகுமார்,மாரியப்பன்,பார்த்திபராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

க.பிரபாகர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


அறிமுக உரையாற்றும் பேராசிரியர் பாலசுப்பிரமணியன்


கலந்துகொண்ட மாணவிகள்



பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்