நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 12 டிசம்பர், 2008

எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு - சென்னை(நிகழ்ச்சி விவரம்)

எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு சென்னை லீ ராயல் மெரிடியன் உணவகத்தில் 13,14-12.2008 இரு நாள் நடைபெறுகிறது.

13.12.2008 காலை 10.35 மணிக்குத் தொடங்கும் மாநாட்டில் தமிழ்நாட்டு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டு மலரைப் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு இராமச்சந்திரனார் அவர்கள் வெளியிடுகின்றார்.

மாநாட்டு வரவேற்புரை திரு சு.ஈசுவரன் அவர்கள்.தலைமையுரை திரு.சொ.சகாதேவன் அவர்கள்.மாநாட்டு அறிக்கை திரு.சா.அன்பழகன் அவர்கள்.மாநாட்டு நோக்கங்களை முனைவர் இரா.இளவரசு,வா.மு.சேதுராமன் விளக்கிப் பேசுவார்கள்

மாநாட்டு அமர்வுகளில் முனவர் மா.நன்னன்,எ.சகாதேவன்(மலேசியா),முனைவர் மலையமான்,டி.குணசேகரன்(மலேசியா)முனைவர் ச.முத்துக்குமரன்,முனைவர் சீத்தாலட்சுமி(சிங்கப்பூர்),க.சிவகுருநாதப் பிள்ளை(இலண்டன்),முனைவர் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்(இலங்கை),விசயராணி(சிங்கப்பூர்),சித்திரன் குருசாமி(சிங்கப்பூர்)ஆறு.அஞ்சப்பன்(சிங்கப்பூர்),பா.தியாகராசன்(சிங்கப்பூர்),இ.கோமதிநாயகம்,பூபதி(சிங்கப்பூர்) உள்ளிட்டோர் கருத்தரங்க அமர்வுகளில் தலைமை தாங்குகின்றனர்.

முனைவர் சரளா இராசகோபாலன்,முனைவர் மலையமான்,புலவர் தி.நா.அறிவொளி, முனைவர் து.சேகர்,அருள்செல்வன் இராசு(மலேசியா),அ.கவிதா,முனைவர் கி.மைதிலி, மன்னர்மன்னன்(மலேசியா),முனைவர் வேல்முருகன்(சிங்கப்பூர்),பார்வதி கைலாசம், முனைவர் குமரன்(மலேசியா) இராசப்பன் முத்துலட்சுமி சிங்கப்பூர்),முனைவர் மு.
இளங்கோவன்(புதுச்சேரி), முருகையன்,தமிழகன்,கல்பனா செல்வராசு, கி.சிற்றம்பலம், முனைவர் ப.அனுராதா,முனைவர் சிவகுமாரன்(சிங்கப்பூர்),சா.கல்பனா(தே.கழகம்) உள்ளிட்ட கட்டுரையாளர்கள் கட்டுரை வழங்குகின்றனர்.

14.12.2008 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆசிரியம் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.ஆ.சோதிநாதன்(மலேசியா) வெளியிட,சி.சாமிக்கண்ணு(சிங்கப்பூர்)
முதற்படி பெறுகிறார்.முனைவர் இராசேந்திரன்(மலேசியா)ஏற்புரை.

14.12.08 ஞாயிறு பிற்பகல் 4 மணிக்கு நிறைவு விழா.
மாநாட்டு நிறைவுரையும் விருது வழங்கலும்
முனைவர் கா.மாரியப்பன்(மேனாள் பள்ளிக்கல்வி இயக்குநர்).
(பதிவு செய்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இது இருக்கும்)

1 கருத்து:

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க.
தங்களின் வலைப்பதிவுகளின் கட்டுரைகள் அருமை. நல்ல முயற்சி. எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்