நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 மே, 2014

திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா


திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 28. 05. 2014 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. திருத்தவத்துறை(இலால்குடி) அருள்மிகு பெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு எழுமுனிவர்க்கிறைவர் திருக்கோயில் வளாகத்தில் பண்ணிசை அரங்கு, படத்திறப்பு, உரையரங்கம், பாராட்டரங்கம், கலைமாமணி தாயுமானவர் அவர்களின் நிகழ்ச்சிகள் எனச் சான்றோர் பலரும் பங்கேற்கும் அரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

விழாத் தலைமை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

முன்னிலை: செயல் அலுவலர் அவர்கள், திருக்கோயில் இலால்குடி

பண்ணிசை அரங்கம்: 
தேவார இசைமணி சுந்தர சாமவேதீசுவரன்
திருமுறை நன்மணி நா சுப்பிரமணியன் குழுவினர்.

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் படத்திறப்பு
முதுபெரும் புலவர் ப. அரங்கசாமி அவர்கள்

நூற்றாண்டு விழாத் தொடக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன்

தலைமையுரை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

யாம் கண்ட பண்ணாராய்ச்சி வித்தகர் - உரையரங்கம்

கயிலை எசு. பி. இராமசாமி
புலவர் மா. திருநாவுக்கரசு
இறைநெறி இமயவன்
திரு. க. தமிழழகன் நாடுகாண் குழு
திரு. ச. இராமையா, காரைப்பாக்கம்
திரு. து. திருஞானம், பாளையப்பாடி
திரு. பூவை பி. தயாபரன், பூவாளூர்
திரு. வ. பஞ்சநாதன், திருமானூர்
திரு. அ. சீனிவாசன், திருத்தவத்துறை
திரு. நா. சு. மணியன், திருமங்கலம்
திரு. சி. சுந்தரராசலு, கீழைப்பழுவூர்
திரு. சு. பெரியசாமி, புள்ளம்பாடி

பாராட்டுச் சிறப்பரங்கம்
திரு. இராம. துரைக்கண்ணு- தனமணி இணையர் (80 அகவை நிறைவு)

விழாப் பேருரை முனைவர் சண்முக செல்வகணபதி

தமிழின்பம் பருக! அனைவரும் வருக!



கருத்துகள் இல்லை: