நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 அக்டோபர், 2011

புதுவையில் கனமழை

புதுவையில் இரவிலிருந்து மழை தொடர்ந்து பெய்கின்றது. மழை அதிகம் என்பதால் மக்கள் தீபாவளி கொண்டாட வழியில்லாமல் போனது. எங்கும் வெடிச்சத்தம் இல்லை. புதுவையின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், சூரியகாந்தி நகர், செந்தாமரை நகர்,வசந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாய்க்கடை உடைப்பெடுத்து தெருவெங்கும் சாய்க்கடை நீராக உள்ளது.

இலாஸ்பேட்டை, கோரிமேடு பகுதிகளில் பெய்த மழைநீர் ஓடும் வாய்க்கால் தூர் வாரப்படாததால் வாய்க்கால் நீர் தெருவுக்குள் புகுந்துள்ளது. தரைத்தளத்தில் இருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருள்கள் நனைந்துள்ளன. சில வீடுகளில் பீரோக்கள், வாஷிங் மெஷின்கள்,பிரிஜ் நீரில் மூழ்கியுள்ளன.

பள்ளமான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மேட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். வீட்டில் நிறுத்திவைத்திருந்த கார், மோட்டார் பைக் முதலியவை நீரில் மூழ்கியுள்ளன. சாய்க்கடை நீர் குடிநீரில் கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை: