நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 25 அக்டோபர், 2011

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் 2012 மே மாதம் 19,20 நாள்களில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகம் /கல்லூரி/ நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கலாம்.

பதிவுக்கட்டணம் 500 உருவா ஆகும். உடன் வரும் விருந்தினர் கட்டணம் 150 ஆகும்.
கட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHER’S ASSOCIATION, MADURAI-625 021 என்ற முகவரியில் மாற்றும் வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

கட்டுரைகள் 5 பக்க அளவில்(டெம்மி அளவில்) அச்சில்வரும்படி இருக்க வேண்டும்.

கருத்தரங்கு நிகழிடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், 59,அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர்- 560 042

நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2043, (2012 மே 19-20)

ஆய்வுக்கட்டுரை,பேராளர் கட்டணம் அனுப்ப இறுதிநாள் 31.12.2011.

தொடர்பு முகவரி:

முனைவர் மு.மணிவேல் அவர்கள்,
செயலர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,
தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை 625 021

தொடர்பு எண்கள்; +98655 34622 / +94886 16100

கருத்துகள் இல்லை: