நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 அக்டோபர், 2011

ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி - தமிழ் இணையம் அறிமுக விழா


பார்வையாளர்கள்

புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 12.10.2011 புதன்கிழமை காலை 11 .30 மணியளவில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் திரு.மு.முகமது ஷா அவர்கள் தலைமை ஏற்றுச், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து இணையத்தின் இன்றையத் தேவையை மாணவர்களுக்கு வலியுறுத்திப் பேசினார். விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பேராசிரியர் மு.செந்தமிழ்க்கோ அவர்கள் வரவேற்றார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் மன்றக் கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கினார். இணையத்தின் தேவையை மாணவர்களுக்கு எடுத்துரைத்துத் தமிழ்த்தட்டச்சு தொடங்கி, இணையத்தில் உள்ள தமிழ் நூல்கள் குறித்த செய்திகள், மின்னஞ்சல் வசதி, உரையாடல் வசதி, விக்கிப்பீடியா உள்ளிட்ட தளங்களை அறிமுகம் செய்து, தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றை மாணவர்களின் உள்ளம் உணரும் வகையில் எடுத்துரைத்தார்.

விழாவில் ஆச்சார்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.பாரதிதாசன் உள்ளிட்டவர்களும் பிற துறைசார்ந்த பேராசிரியர்கள், மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்த இணைய அறிமுகத்தால் ஏற்பட்ட பயன்களை நிறைவாக எடுத்துரைத்தனர்.

திரு.அ.வேல்முருகன் அவர்கள் நன்றியுரைத்தார்.


பேராசிரியர் மு.முகமது ஷா(முதல்வர்)


மு.இளங்கோவன் உரை


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


கலந்துகொண்டவர்களின் கருத்துரை


கலந்துகொண்டவர்களின் கருத்துரை


கலந்துகொண்டவர்களின் கருத்துரை

கருத்துகள் இல்லை: