நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 நவம்பர், 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம்,திருநெல்வேலி

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம் 2010, மேத் திங்கள் 15,16(காரி, ஞாயிறு) கிழமைகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. பேராசிரியர் சபாபதி மோகன் அவர்கள் (துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) புரவலராக இருந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளார்.

பல்கலைக்கழகம், கல்லூரிகள், நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டும் பேராளர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கலாம்.

பதிவுக்கட்டணம்

பேராளர் பதிவுக்கட்டணம் உருவா 500-00
உடன் வரும் விருந்தினர் கட்டணம் உருவா 150-00

கட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION,MADURAI-625 020என்னும் முகவரியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

கட்டுரை 5 பக்க அளவில் இருத்தல் வேண்டும்.

இலக்கியவியல், இலக்கணவியல், சமயவியல், பண்பாட்டியல் / வரலாற்றியல் இக்கால இலக்கியம், பல்துறை இயல் என்ற பிரிவுகளில் அமைத்தல் நலம்.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் சேர்த்து விடுத்து வைக்க நிறைவுநாள் 31.12.2009

பேராளர்களுள் நூலாசிரியர்கள் இருப்பின் அவர்கள் 2009 சனவரி-திசம்பர் காலத்தில் நூல் எழுதியிருப்பின் நூலாசிரியர் வாழ்க்கைக்குறிப்பு, நூற்படி 2,பதிவுக்கட்டணம் 25 ஆகியவற்றைச் செயலர் முகவரிக்கு 31.01.2010 நாளுக்குள் அனுப்பவேண்டும். நூலாசிரியர்கள் விழா அரங்கில் சிறப்புச் செய்யப்பெறுவர்.

தொடர்பு முகவரி:
முனைவர் மு.மணிவேல்
செயலர்,இ.ப.த.மன்றம்,தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625 020
செல்பேசி: 98655 34622

2 கருத்துகள்:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

நன்றி இளங்கோ என் பக்கத்திலும் உன் அனுமதியோடு இவ்வறிவிப்பை வெளியிடலாமா?

vivilia02 சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பரே