நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 நவம்பர், 2009

அந்தமான் தமிழர் சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை நடுவண் அமைச்சர் திரு.நெப்போலியன் திறந்து வைத்தார்...

அந்தமான் தமிழர் சங்கமும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து அந்தமான் தலைநிகர் போர்ட்டு பிளேயரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவையும், திருக்குறள் கருத்தரங்கத்தையும் நவம்பர் 6,7,8 ஆகிய நாள்களில் நடத்துகின்றன. இன்று மாலை நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் சிலையை நடுவண் அமைச்சர் திரு.நெப்போலியன் திறந்து வைத்தார். மேலும் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநாட்டு மலரினை அமைச்சர் நெப்போலியன் வெளியிட அந்தமான் பாராளுமன்ற உறுப்பினர் பிட்னு பதே இராய் பெற்றுக்கொண்டார். அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் போசராசன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் இலக்கிய உரையாற்றிக் கொண்டுள்ளார். நிறைவில் அமைச்சர் உரையாற்றுவார்.

கருத்துகள் இல்லை: