நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 நவம்பர், 2009

அந்தமான் திருவள்ளுவர் சிலை திறப்பு,திருக்குறள் கருத்தரங்கம் சில படங்கள்


அந்தமானில் திருவள்ளுவர் சிலையைத் திறந்த அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்ட தமிழன்பர்கள்



மாண்புமிகு நடுவண் இணையமைச்சர் நெப்போலியன் அவர்கள் எனக்குப் பாராட்டிச் சான்று வழங்கும் காட்சி."இவன் இணையத்தமிழறிஞன்" என்று அமைச்சருக்கு என்னை அறிமுகம் செய்யும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை. நடராசன், மற்றும் அண்ணாச்சி வி.சி.பி.சந்தோசம் அவர்கள்



அந்தமான் திருக்குறள் விழாவில் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன்,அண்ணாச்சி வி.சி.பி.சந்தோசம் அவர்களுக்கு நடுவில் மு.இளங்கோவன்



அந்தமான் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடுவண் இணைஅமைச்சர்
மாண்புமிகு நெப்போலியன் அவர்களிடம் தம் நூல்களை வழங்கி மகிழும் மு.இளங்கோவன்


அந்தமான் தமிழர் சங்கக் கட்டடம் அடிக்கல்


அந்தமான் தமிழர் சங்கக்கட்டடம்


செல்லுலர் சிறைச்சாலையின் ஒரு பகுதி


ஔவையார் அவர்கள் ரோசுத்தோட்டத்தில்(அந்தமான்)தமிழ், 
தமிழர் பற்றி எனக்கு வகுப்பெடுத்தல்



குமரி அனந்தன் அவர்களுடன் செல்லுலார் சிறைச்சாலையின் வளாகத்தில் நான்



செல்லுலார் சிறைச்சாலையில் குமரிஅனந்தன், ஔவை நடராசன் ஆகியோருடன் மு.இ.


ஆற்றல் மாந்தர் அந்தோணிமுத்து,ஔவை,அம்மாவுடன் நான்


அந்தமான் தீவு ஒன்றில் மு.இ.

9 கருத்துகள்:

செல்வமுரளி சொன்னது…

மிக்க மகிழ்ச்சியான விடயம்.

தொடருங்கள்

selva.Murali
www.tamilvanigam.com

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

சூடாக பின்னூட்டம் வருகிறதே எப்படி இளங்கோ

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

சூடாக பின்னூட்டம் வருகிறதே எப்படி இளங்கோ

ஹ ர ணி சொன்னது…

Dear Brother,
First of all my heartiest wishes for getting semmozhi award.Also sorry for the delay wishes. I enjoyed with your andaman island trip photos. Keep it up. I wish you to get more and more awards in future. see you brother. Dr. K.Anbalagan, Annamalai University.

ஹ ர ணி சொன்னது…

Dear Brother,
First of all my heartiest wishes for getting semmozhi award.Also sorry for the delay wishes. I enjoyed with your andaman island trip photos. Keep it up. I wish you to get more and more awards in future. see you brother. Dr. K.Anbalagan, Annamalai University.

passerby சொன்னது…

வணக்கம்.

சிறப்பான பணிபற்றி சிறப்பான் இடுகைகளும் புகைப்படங்களும்.

நன்றிகள் பல.

திருவள்ளுவரின் மாட்சி கடல் கடந்து தமிழர்களால் எடுத்துச்செல்லப்படுவது பேருவகை.

அதில் உங்கள் பங்கும் உண்டு என்பதை நினைந்து நினைந்து உங்கள் வாணாடகள் கழியும். இதைவிட இன்பமொன்று உண்டோ?

பொறாமைப்பட வைத்துவிட்டீர்கள்.

என் தாய்மொழி தமிழ். - அப்படி என் பெற்றோர் சொன்னார்கள். ஏனெனின், தாய் மொழியை நான் அறிய்வேண்டும் என அவாக்கொண்டு அணைத்தது என் வாணாட்களில் மிகவும் பிற்பகுதியான் தற்போதே. .

“ஆங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்
பேடிக்கல்வி பயின்றுழலும் பித்தர்கள்”

அப்பித்தர்களின் ஒருவன் யான். உங்கள் இணையத் தமிழ்ப்பணி இப்பித்தர்களை தங்கள் தாய்மொழியை அறிய் ஆழங்காட்பட பேருதவி புரியும். உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை!.

அது கிடக்க.

செல்லுலர் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொல் இருக்கத்தான் வேண்டும்.. அதைத் தேடிக்கண்டு பிடித்து எங்கட்கு சொல்வது நுங்கள் கடப்பணி.

காத்திருக்கிறேன்.

இவண்
கள்ளபிரான்

Nilavan சொன்னது…

புகைப்படங்கள் அருமை ...

விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Tamil Nenjan சொன்னது…

திருவாளர் கள்ள பிரான் அவர்கள் செல்லுலார் சிறைக்கு ஈடான தமிழ்ச் சொல் பற்றி கேட்டிருந்தார். அந்தமான் தீவு வாழ் தமிழர்களிடையே "கூண்டுச் சிறை" என்ற சொற்பதம் பல ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. இங்கிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கைகளும் இதே சொல்லை பயன் படுத்தி வருகின்றனர்.

அந்தமான் தமிழ் நெஞ்சன்
tnkdcealhw@gmail.com
http://andamantamil.blogspot.com

passerby சொன்னது…

நன்றி திரு தமிழ் நெஞ்சன்.

பொருத்தமாகத்தான் இருக்கிறது ‘கூண்டுச்சிறை’ என்ற பதம்.