banner

நிகழ்வுகள்

// முனைவர் மு.இளங்கோவன் நூல்கள் புதுவையில் வெளியீடு, விவரம் விரைவில்...//

சனி, 7 நவம்பர், 2009

அந்தமான் திருக்குறள் விழா இரண்டாம்நாள் நிகழ்வு தொடங்கியது…

அந்தமான் திருக்குறள் விழாவின் இரண்டாம்நாள் நிகழ்வு காலை 10 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.முதல் நிகழ்வாகத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை.நடராசன் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.

திருவள்ளுவர் வலியுற்றுத்துவது சமூக ஒழுக்கமா?தனிமனித ஒழுக்கமா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
பேராசிரியர்கள் உலகநாயகி அவர்களின் தலைமையில் முனைவர் அரங்க.பாரி,முனைவர் பிலவேந்திரன்,சுதா ஓர் அணியாகவும் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் தலைமையில் பேராசிரியர்கள் இராசா, திலகவதி ஆகியோர் ஓர் அணியாகவும் இருந்து அவையினர் உளங்கொள்ள திருக்குறள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

பகலுணவுக்குப் பிறகு மாலையில் நிகழ்ச்சி தொடங்கியது.இன்னும் சற்று நேரத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிடைபெற உள்ளது.அவையில் மாண்புமிகு நடுவண் அமைச்சர் திரு.நெப்போலியன் அவர்கள் வந்து அமர்ந்துள்ளார்கள்.அந்தமான் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.அந்தமான் தமிழர்கள்,தமிழகத்து அறிஞர்கள் ஆய்வாளர்கள் அந்தமான் தமிழர் சங்க அரங்கில் உள்ளனர்.

1 கருத்து:

இரத்தினபுகழேந்தி சொன்னது…

நல்லது இளங்கோ உடனுக்குடன் பதிவதற்கு பாராட்டுகள்.படங்களையும் பதிவேற்று.வாழ்த்துகள்