நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அந்திமழை புதிய மாத இதழ்!




சென்னையிலிருந்து அந்திமழை மாத இதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது (ஆகத்து-செப்டம்பர் 2012). இலக்கிய ஆர்வலர்களை மகிழ்ச்சியூட்டவும், சமூக, அரசியல் ஆர்வலர்களைச் சிந்திக்கச் செய்யவும், விளையாட்டு, திரைத்துறையினர்க்குப் புத்துணர்ச்சியூட்டவும் இந்த இதழ் பயனுடைய செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டினுக்கு உரியது. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், பெருமைக்குரிய எழுத்தாளர்களின் படைப்புகள், நாட்டு நடப்புகள் குறித்த கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

இந்த மாத இதழில் பாமரன், அந்திமழை இளங்கோவன், இரா.கௌதமன், சஞ்சனா மீனாட்சி, ஜோதி ஸ்வரூபா, குமரன் மணி, சகாயம் ஐ.ஏ.எஸ், அ.முத்துலிங்கம், பேராச்சி கண்ணன், திருச்சி லெனின், செல்வி, என்.அசோகன், நாகராஜ சோழன், அ.தமிழன்பன், மு.இளங்கோவன், பெருமாள் முருகன், புதுவை இளவேனில், சுகுமாரன், இயக்குநர் மணிவண்ணன், ஆர்.சி.ஜெயந்தன் ஆகியோரின் படைப்புகள், திறனாய்வுகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

கான் அகாடமியின் நிறுவுநர் சல்மான் கான் பற்றிய கட்டுரையும், சின்னப்பிள்ளை அவர்களின் சாதனை வாழ்வும், சகாயம் அவர்கள் அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் தமிழ் உணர்வு குறித்துப் பகிர்ந்துகொண்ட அனுபவப் பகிர்வும், புதுவை இளவேனிலின் குறிப்பிடத்தக்க ஒளிப்படங்களும் இதழை அழகூட்டி வியக்க வைக்கின்றன. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள்,சமூகச் சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய இதழ்.

அந்திமழை ஆசிரியர் குழு:

சிறப்பாசிரியர்: சுகுமாரன்
நிர்வாக ஆசிரியர் என்.அசோகன்
ஆசிரியர்: கௌதமன்

தனி இதழ் விலை: 20 ரூபாய்

முகவரி:

அந்திமழை,
24 ஏ, கண்பத்ராஜ் நகர், காளியம்மன் கோயில்தெரு,
விருகம்பாக்கம், சென்னை- 600 092
தொலைபேசி: 044- 43514540

4 கருத்துகள்:

Jayakumar Chandrasekaran சொன்னது…

How do I buy or subscribe? Particularly outside Tamilnadu. Email Jayakuar22384@gmail.com

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கமான தகவல் சார்... நன்றி... எங்கள் ஊரில் கிடைக்குமா என்று விசாரிக்கிறேன்...

Loganathan - Web developer சொன்னது…

good , waiting to see

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்