நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 8 ஆகஸ்ட், 2012

மாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூலகங்கள் அறிமுகம்


விழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்

விழுப்புரம் மாவட்ட மைய நூலகர் திரு.அசோகன் அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் மாவட்ட மைய நூலகமும், கல்கத்தா இராசாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையும் இணைந்து மாவட்ட அளவில் நூலகர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி வழங்கும் நிகழ்வைக் கடந்த 01.08.2012 பிற்பகல் நடத்தியது. அதில் நான் கலந்துகொண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சற்றொப்ப 50 கிளை நூலகர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம், தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்தை இரண்டரை மணி நேரம் வழங்கினேன்.

அதுபோல் 08.08.2012 பிற்பகல் கடலூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளை நூலகர்கள் சற்றொப்ப ஐம்பதின்மருக்குப் பயிற்சி வழங்கினேன். இவர்களுக்கும் தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், நூலகங்கள், மின்பதிப்புகள் பற்றி விளக்கினேன். தமிழக அரசு கணினி, இணைய வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளையும் நினைவுகூர்ந்தேன். அனைவரும் கணினி, இணைய நூலகம், மின்னிதழ்கள் குறித்து ஆர்வமுடன் தெரிந்துகொண்டனர். கடலூர் மாவட்ட நூலகர் திரு.சி.சின்னத்தம்பி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


திரு.அசோகன்(விழுப்புரம் மாவட்ட நூலகர்), திரு.சின்னத்தம்பி(கடலூர் மாவட்ட நூலகர்),மு.இ,


கடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்


கடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்




விழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்களுடன் தகவலுக்கு நன்றி சார்..