நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அடித்தள மக்களின் உலக நோக்கு – நாட்டுப்புறவியல் பயிலரங்கம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூய சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல்(FRRC) துறையில் அடித்தள மக்களின் உலகநோக்கு (Worldview of Subaltern People) என்னும் பொருளில் நாட்டுப்புறவியல் பயிலரங்கம் 2012 ஆகத்து மாதம் 6 முதல் 11 வரையில் ஆறுநாட்களுக்கு நடைபெறுகின்றது.

இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டம் பயில்கின்ற ஆய்வு மாணவர்களும் ஆர்வலர்களும் இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் சிறப்புரை, நெறியாளர் உரை, ஆவணப்படத் திரையீடு, குழுவிவாதம், வாசிப்பு, களப்பணி, ஆய்வுரை தயாரித்துப் பார்வையாளர் முன் வழங்குதல் என்று பயனுடைய முறையில் இந்தப் பயிலரங்கு நடைபெற உள்ளது.

பயிலரங்கக் கட்டணம்: ஆறு நாட்களுக்கும் உறைவிடம், பகலுணவு, தேநீர், ஆய்வுத்தாள்கள் ஆகியவற்றுக்கு
மொத்தக்கட்டணம் : உருவா: 900

உறைவிடம் தேவையற்றவர்களுக்குக் கட்டணம் உருவா : 600

பதிவுசெய்துகொள்ள கடைசிநாள் 04.08.2012

தொடர்புக்கு:

இயக்குநர்,
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம்,
தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை-627 002
திருநெல்வேலி மாவட்டம்

தொலைபேசி எண் 0462-2561932, 2560804

பேராசிரியர் ஆ.தனஞ்செயன் - 9486041862

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நல்ல தொரு முயற்சி தகவலுக்கு நன்றிகள்.