நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா




இலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டை நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் 14.12.2013 இல் நடைபெறுகின்றது. மூத்த வழக்கறிஞர்  இரா. காந்தி அவர்களின் தலமையில் நடைபெறும் விழாவில் இரா. மதிவாணன் அவர்கள் வரவேற்புரை வழங்குகின்றார். முனைவர் ஔவை நடராசன், முனைவர் கோ. விசயராகவன், முனைவர் மு.முத்துவேலு உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். இலண்டனில் வாழும் செல்வா. செல்லதுரை அவர்கள் ஏற்புரை வழங்குவார். நிகழ்ச்சி ஏற்பாடு: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

செல்வா செல்லதுரை அவர்களைப் பாராட்டுவோம்.
விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்