நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 19 ஜூலை, 2011

பேராசிரியர் ப. சிவராஜி நூல்கள் வெளியீட்டுவிழா


முனைவர் ப.சிவராஜி அவர்கள்

நாள்: 31.07.2011 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: அல்லாமா இக்பால் அரங்கம், இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் எழுதிய புலவர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள், செந்நாப்புலவர் ஆ. கார்மேகக்கோனார் இலக்கியப்பணிகள் என்னும் நூல்களின் வெளியீட்டு விழா வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் அல்லாமா இக்பால் அரங்கில் 31.07.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புலவர் இரா.இளங்குமரனாரின் தலைமையில் நடைபெறும் விழாவில் ச.வினோத்குமார் வரவேற்புரையாற்றுகின்றார். சி.கெய்சர் அகமது, கனி முகமது ஜாவித், முனைவர் சையத் சாகாபுதீன், முனைவர் பிரேம்நசீர் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி நீதியரசர் த. கிருபாநிதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கரு.அழ.குணசேகரன் ஆகியோர் நூல்களை வெளியிட திரு.வ.கோ. சுந்தரமூர்த்தி இ.ஆ.ப அவர்களும் அரக்கோணம் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சீத்தாராமன் அவர்களும் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

முனைவர் முகமதலி ஜின்னா, பேராசிரியர் அப்துல்காதர், பேராசிரியர் சுகேல், முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். வாணியம்பாடி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தமிழ்மன்றங்களின் பொறுப்பாளர்கள், அரசியல் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை: