நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 25 டிசம்பர், 2010

கோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

கோவை பெரியார்களம் அமைப்பின் சார்பில் 26.12.2010 காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது.

இடம்: கல்வியகம், கோவை.

வசந்தம் கு.இராமச்சந்திரன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது. ம.சந்திரசேகர் வரவற்புரையாற்றுகின்றார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றுகின்றார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையம் குறித்த பயிற்சியை வழங்குகின்றார்.

சு.வேலுசாமி நன்றியுரையாற்றுகின்றார்.

தொடர்புக்கு: 94442 10999 , 98943 65302





3 கருத்துகள்:

PRINCENRSAMA சொன்னது…

மிக்க மகிழ்ச்சி... தமிழினத்தை அடுத்த களத்திற்கு நகர்த்துவோம்!

ஜோதிஜி சொன்னது…

வாழ்த்துகள்.

சரவணன்.D சொன்னது…

தாங்கள் பணி தொடரட்டும்!!!
தகவலுக்கு நன்றி ஐயா!!!