நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 18 டிசம்பர், 2010

ஆடுதுறை இணையப் பயிலரங்கம் தொடங்கி நடைபெறுகின்றது...


கரு.மலர்ச்செல்வன் இணையம் கற்போம் நூல் வெளியிட அதனைப் பெறுகின்றார் திட்டக்குடித் திரைப்படத்தின் இயக்குநர் சுந்தரன். அருகில் சிங்கப்பூர் இரவிச்சந்திரன், நூலாசிரியர் மு.இளங்கோவன்

பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறையில் இன்று(18. 12. 2010) காலை 10.30 மணியளவில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைக் கரு.மலர்ச்செல்வன் வரவேற்றார். புதுச்சேரி மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்கள்,பொதுமக்களுக்குத் தமிழ் இணையம்,தட்டச்சு, மின்னஞ்சல், விக்கிப்பீடியா வசதிகளை எடுத்துரைத்தார்.
முனைவர் இரத்தின. புகழேந்தியும் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.
இலண்டனில் உள்ள சிவா பிள்ளையுடன் மாணவர்களும் அறிவகம் நூலகப் பொறுப்பாளர் திருமதி. வாணியும் காணொளி வழியாக உரையாடினர்.

நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூரிலிருந்து இணைய ஆர்வலர் இரவிச்சந்திரன் அவர்கள் வருகைபுரிந்து வாழ்த்துரை வழங்கினார். திட்டக்குடி திரைப்பட இயக்குநர் சுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். கடலூர் திரைப்பட இயக்கத்தின் செயலாளர் சாமிக் கச்சிராயர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் செம்பதிப்பைக் கரு. மலர்ச்செல்வன் வெளியிடச் சிங்கப்பூர் இரவிச்சந்திரன், திரைப்பட இயக்குநர் சுந்தரன் ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது...

1 கருத்து:

chockalingam சொன்னது…

அன்பரே ஆடுதுறை நிகழ்ச்சியை மிகவும் பாராட்டுகிறேன்