நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கோவை பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கியது...


பார்வையாளர்கள் ஒரு பகுதி

கோவையில் இன்று26.12.2010 காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
கல்வியகம் அரங்கில் தொடங்கிய பயிலரங்கில் திரளான மாணவர்கள்,
தமிழ் ஆர்வலர்கள்,வலைப்பதிவர்கள் கலந்துகொண்டனர். பிரின்சு பெரியார் அறிமுக உரையாற்றினார். தலைமை வசந்தம் இராமச்சந்திரன்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார். இலதானந்து கலந்துகொண்டு தம் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேராசிரியர்கள் துரை,இரவி ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.கோவை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். தமிழ்த்தேனீ, அமெரிக்காவிலிருந்து வைரம் ஸ்கைப்பில் வந்து உரையாடினர். மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டின் பல கூறுகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பயிலரங்கம் தொடர்கின்றது.


பார்வையாளர்கள் ஒரு பகுதி

கருத்துகள் இல்லை: