நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 அக்டோபர், 2008

மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்க உள்ளது...



தமிழ் இணையப் பயிலரங்கம் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் இன்று
(13.10.2008) இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.மு.இளங்கோவனாகிய நானும் நண்பர்கள் சு.முகுந்தராசு,வே.முருகையன்,வெ.யுவராசு,செல்வமுரளி,தருமபுரி நரேந்திரன் உள்ளிட்டோர் விழா நடைபெறும் அரங்கில் ஒன்று கூடியுள்ளோம்.

நிகழ்ச்சியின் அடுத்த நிகழ்வுகளை உடனுக்குடன் இணையத்தில் தெரிவிப்போம்.

3 கருத்துகள்:

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

பயிலரஙக்ள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி.. மேலும் படங்களையும் நிகழ்வு குறித்த நேரடி செய்திகளையும் வலையேற்றுங்கள்

S.Lankeswaran சொன்னது…

அயராத முயற்சி இடைவிடாத கருத்தரங்குகள், தேடித்தேடி தமிழ் அறிஞர்கள் புகழ் பரப்பும் கொள்கை அது தான் முனைவர்.மு.இளங்கோவன் ஐயா அவர்கள்.

அரியாங்குப்பத்தார் சொன்னது…

உடனுக்குடன் தகவலைத் தர முயற்சிக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.

“மோகனூர்” எங்கே ஐயா உள்ளது?