நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 24 ஜூலை, 2014

பொதிகையில் ஒளிபரப்பான பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்க்கையும் பணியும்( காணொளி)

  
குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கையையும் பணியையும் அறிமுகப்படுத்தும் வகையில் பொதிகை தொலைக்காட்சி 24. 05. 2014 இல் சற்றொப்ப 54 நிமையங்கள் சிறப்பு ஒளிபரப்பு ஒன்றை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியைத் தமிழகத்திலும் கடல்கடந்த நாடுகளிலும் தமிழ்ப்பெருமக்கள் பலர் ஆர்வமுடன் பார்த்து வாழ்த்துரைத்தனர்.


   தமிழிசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்த குடந்தை ப.சுந்தரேசனாரின் குரலிசையை யூடியூப் இணைப்பில் உள்ள காணொளியில் கேட்டு மகிழலாம்.

 யு டியூப்பில் பார்க்க (பகுதி 1) இங்கு அழுத்துக 

  பண்ணாராய்ச்சி வித்தகரின் மேம்படுத்தப்பட்ட குரலிசையை இன்னும் கூடுதல் பாடல்களுடன் விரைவில் வெளிவர உள்ள அவர் ஆவணப்படத்தில் கேட்டும் பார்த்தும் மகிழலாம். இந்த வரலாற்று மீட்பு முயற்சியில் துணைநின்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

கருத்துகள் இல்லை: