நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 12 ஜூலை, 2014

கணினித்தமிழ் வளர்த்த ஆண்டோபீட்டர் நினைவுநாள்



ஆண்டோபீட்டர்


   தமிழகத்தில் கணினித்துறை பரவலாக அறிமுகம் ஆவதற்குப் பலர் உழைத்துள்ளனர். அவர்களுள் திரு. ஆண்டோபீட்டர் அவர்களின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல்வேறு ஊர்களில் கல்விநிறுவனங்களை உருவாக்கியும், குறுவட்டுகள் பல வெளியிட்டும் நூல்கள் பல எழுதியும், கணினித் தமிழ் வளர்த்தவர். உலகத் தமிழ் இணைய மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடைபெறவும் காரணமாக இருந்து உழைத்தவர். இளம் அகவையிலும் தம் அறிவாற்றலின் துணைகொண்டு மூத்த அறிஞர்களை எல்லாம் நட்பாகக்கொண்டு இயங்கியவர். 

  அமெரிக்காவுக்கு நாங்கள் சென்றபொழுது எங்களுக்குப் பெருந்துணையாக இருந்து நெறிப்படுத்தியவர். அமெரிக்காவில் நானும் அண்ணன் வாழப்பாடி திரு. இராம. சுகந்தன் அவர்களும் ஒன்றாகத் தங்கியிருக்க வாய்ப்பை உருவாக்கி எங்களுக்கு இடையில் நட்புமலரக் காரணமாக இருந்தவர். தொடர்ந்து உரையாடி என் முயற்சிகளை ஊக்கப்படுத்திய பெருமகனாரின் நினைவுநாள் (சூலை 12, 2012) இன்று அமைகின்றது. அமெரிக்காவில் திரு. ஆண்டோபீட்டர் அவர்களுடன் எடுத்துக்கொண்ட சில படங்களைப் பதிந்து வைக்கின்றேன்.

   புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் அவர் பணிகளை நினைவுகூர்வோம்.

















2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆண்டோ பீட்டரின் நினைவுகளைப் போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சாதனையாளர்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளும் தங்களின் மனப்பாங்கு போற்றத்தக்கது. நன்றி.