நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 25 ஜூலை, 2011

த.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசு- 2010 பரிசளிப்பு விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கியப் பரிசு-2010 பரிசளிப்பு விழா எதிர்வரும் ஞாயிறு 31.07.2011 காலை 10 மணிக்குச் சென்னையில் நடைபெற உள்ளது.

பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு இந்த விழாவில் பரிசு வழங்கப்படுகின்றது. அவ்வகையில் எழுத்தாளர்கள் சோலை சுந்தரபெருமாள், டி.செல்வராஜ், ச.சுப்புராவ், சந்திரா மனோகரன், நிழல்வண்ணன் உள்ளிட்டவர்கள் தங்கள் நூல்களுக்குப் பரிசுபெறுகின்றனர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவுத் தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூல்- இலக்கியப் பரிசுக்கு முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையும்,சான்றிதழும் விழாவில் வழங்கப்படுகின்றன.

விழாவிற்கு எழுத்தாளர் அருணன் தலைமை தாங்குகின்றார். சிவ.செந்தில்நாதன் வரவேற்புரையாற்றவும், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றவும், வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

எழுத்தாளர் கமலாலயன், சைதை ஜெ, மயிலை பாலு, கி.அன்பரசன், ச.விசயலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்களின் துணைவியார் திருவாட்டி கோகிலா சமுத்திரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார்.

வெ.இரவீந்திரபாரதி நன்றியுரையாற்ற உள்ளார்.
.

இடம்: கே.பி.பாலச்சந்தர் நினைவரங்கம்,
அசோகா திருமண மண்டபம்,
48, பம்மல் நல்லதம்பி தெரு,
எம்.ஜி.ஆர்.நகர், சென்னை- 600 078

5 கருத்துகள்:

முனைவர் அண்ணாகண்ணன் சொன்னது…

வாழ்த்துகள் மு.இ.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

சங்கமம்லைவ் சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா

-"சங்கமம்"விஜயகுமார்

அதிரைக்காரன் சொன்னது…

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com

ராம்ஜி_யாஹூ சொன்னது…

வாழ்த்துகள் மு.இ.

மணிவானதி சொன்னது…

பரிசு பெறும் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.