நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 2 ஜனவரி, 2009

இசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழிவு

இடம் : மகாலட்சுமி திருமண மண்டபம்,
9.அ,வணிகர் வீதி,காஞ்சிபுரம்(அறிஞர் அண்ணா அரங்கம் பின்புறம்)

நாள் : 04.01.2009,ஞாயிறு,பிற்பகல் 2.30 மணி.

கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகளை ஆராயும் நோக்கில் காஞ்சிபுரம் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சிமையம் காஞ்சிபுரத்தில் ஒரு சிறப்பு ஆய்வரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.பேராசிரியர் ப.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் வில்லிசைக் கலைஞர் மா.பழனி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்கள்.

சென்னை,கலை-பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் வ.செயபால்,தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஏ.பக்கிரிசாமி பாரதி,புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

மருதம் இளந்தமிழன் அவர்கள் நன்றியுரையாற்றவும் பொன்மனோபன் தொகுப்புரை வழங்கவும் உள்ளனர்.நாட்டுப்புறவியல் கலைஞர்கள் ஒன்றுகூடும் விழாவில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: