நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 ஆகஸ்ட், 2015

பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பேருரை விழா



தமிழ்ப் பேராசிரியரும், திருக்குறள் ஆய்வுகளில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்களுமான பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் அவர்களின் நினைவு  இலக்கியப் பேருரை விழா 29.08.2015 காரி (சனி)க் கிழமை காலை 10.30 மணிக்குச் சேத்தியாத்தோப்புக்கு அருகில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார்கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

மொழியியல் பேரறிஞர் முனைவர் செ.வை.சண்முகம், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் மருதூர் அரங்கராசனார், பேராசிரியர் த.சாமிநாதன், குமுடிமூலை திரு. கி. திருமாறன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க உள்ளனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் சா. அந்துவன்(இலண்டன்) அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் செய்துள்ளனர். அனைவரும் கலந்துகொண்டு தமிழாய்வில் ஈடுபட்ட தலைமகனின் பெருமைகளை நினைவுகூரலாம்.

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பேருரை விழா சிறக்க வாழ்த்துக்கள்.