புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு. து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் புதிய இணையத்தளத்தைத் தொடங்கிவைக்கும் காட்சி.அருகில் தொல்காப்பிய அறிஞர்களும் ஆர்வலர்களும்
உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையத்தளம் தொடக்க விழா மற்றும் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில் உள்ள செகா கலைக்கூடத்தில் 18.08.2015 மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சித் தலைவர் து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு இணையத்தளத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்திப் பேசினார். இணையத்தின் தேவையையும் இணையத்தில் உள்ள தமிழ்ச்
செய்திகளையும் எடுத்துரைத்துப் பேசினார். இணையம் வழியாகத்
தொல்காப்பியம் உலகம் முழுவதும் பரவ உள்ள செய்தியைப் பாராட்டி,
இதுபோன்ற செயல்களில் தமிழ் ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சு. அழகேசன் அவர்கள் தலைமையில் கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் அரங்க. மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு. இளங்கோவன் நோக்கவுரை யாற்றினார். பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் (செம்மொழி நிறுவன மேனாள் ஆய்வறிஞர்), முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்), முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), பேராசிரியர் இ. சூசை அவர்கள் (திருச்சிராப்பள்ளி), பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள் (பிரான்சு), முனைவர் க.தமிழமல்லன் (ஆசிரியர்-
வெல்லும் தூயதமிழ்), பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தொல்காப்பியத் தாவரங்கள்
என்ற ஆய்வுநூல் எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டார். செ. திருவாசகம் நன்றியுரையாற்றினார்.
முனைவர் சு. அழகேசன், மு. இளங்கோவன், திரு.து. மணிகண்டன் இ.ஆ.ப., முனைவர் க. தமிழமல்லன்
முனைவர் க. தமிழமல்லன் உரை
முனைவர் சூசை, முனைவர் போ. சத்தியமூர்த்தி, அரங்க. மாரிமுத்து, முனைவர் கு. சிவமணி, மு. இளங்கோவன். செ. திருவாசகம்,
பேராசிரியர் சக்திவேல்
இரா. பஞ்சவர்ணம் அவர்களைச் சிறப்பிக்கும் காட்சி
இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்குப் பாராட்டு






3 கருத்துகள்:
Dear Dr. Mu. Elangovan & team
So happy to see the writeup and the enthusiasm of all Tamil SCholars involvment in spreading the message of Tamil language's inherent vastness and depth of observation on grammer and soCial Conditions of Tamil Society from sangam period onwards.
Great efforts and a million salutatios to all .
Thanks
Dear Dr. Mu. Elangovan & team
So happy to see the writeup and the enthusiasm of all Tamil SCholars involvment in spreading the message of Tamil language's inherent vastness and depth of observation on grammer and soCial Conditions of Tamil Society from sangam period onwards.
Great efforts and a million salutatios to all .
Thanks
There is no mention of Desyak kavi Subramanya Bharathiyar but his disciple Subbu Rathinam is mentioned very prominengtly.
What is the hidden agendaaaaaaaaaaaaaaaa?
கருத்துரையிடுக