நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 21 அக்டோபர், 2009

செம்மொழி விருதுகள் அறிவிப்பு!

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டு உழைத்தவர்களுக்கு விருதுகளை வழங்க முடிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில்
குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியானதாகத் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.நான் பேருந்துப் பயணத்தில் இருந்தேன்.என் பேராசிரிய நண்பர் மயிலாடுதுறையிலுருந்து அழைத்து செம்மொழி இளம் அறிஞர் விருது எனக்குக் கிடைத்துள்ள செய்தியை மகிழ்ச்சியிடன் பகிர்ந்துகொண்டார்.

பேராசிரியர் அடிகளாசிரியர்,அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டு உள்ளிட்ட இருவருக்கும் தொல்காப்பியர் விருது வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நாளை இது பற்றி விரித்து எழுதுவேன்.

17 கருத்துகள்:

thiru சொன்னது…

வாழ்த்துக்கள்!

RAGUNATHAN சொன்னது…

ஐயா வாழ்த்துகள். இதை படித்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்கள் தமிழ்த் தொண்டு தொடரட்டும். எதையும் எதிர்பாராமல் இணைய தமிழுக்கு தொண்டாற்றும் உங்களைப் போன்றோர் ஏராளமானோர் இங்கு தேவை. :)

Dubuke Themes சொன்னது…

அய்யா,

தாங்களின் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம். வாழ்த்துக்கள்..

தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு ..

Naga Chokkanathan சொன்னது…

வாழ்த்துகள்

- என். சொக்கன்,
பெங்களூர்.

கு.முத்துக்குமார் சொன்னது…

விருதுக்குப் பெருமை !
வாழ்த்துகள் !!
பணி தொடரட்டும் !!!

கு.முத்துக்குமார்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்

கு.முத்துக்குமார் சொன்னது…

விருதுக்குப் பெருமை !
வாழ்த்துகள் !!
பணி தொடரட்டும் !!!

கு.முத்துக்குமார்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்

கு.முத்துக்குமார் சொன்னது…

உங்கள் தமிழ்த் தொண்டு தொடரட்டும். எதையும் எதிர்பாராமல் இணைய தமிழுக்கு தொண்டாற்றும் உங்கlukku வாழ்த்துக்கள்!

புதுப்பாலம் சொன்னது…

வாழ்த்துக்கள்

= இஸ்மாயில் கனி
ஜித்தா

முனைவர் அண்ணாகண்ணன் சொன்னது…

நல்வாழ்த்துகள். தங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும்.

S.Lankeswaran சொன்னது…

பொருத்தமான நேரத்தில் பொருத்தப்பாடுடைய ஒருவருக்கு கிடைத்த விருது. எனது வலைப்பூவில் தங்களை பற்றி எழுதியுள்ளேன் ஒரு தடவை பாருங்கள்.
www.vavuniyatamil.blogspot.com

யுவகிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துகள் மு.வ!

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

விருது குறித்த செய்தி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் அரும்பணிக்கு இது போல இன்னும் பல விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

விருது விழாவில் பங்கேற்ற பின் நிழற்படங்களை இந்த வலைப்பதிவில் இடுங்கள். கண்டு மகிழ்கிறோம்.

தங்கள் தமிழ்ப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

தீப்பெட்டி சொன்னது…

வாழ்த்துகள்..

தங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள்..

கபிலன் சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா : )
தங்கள் தமிழ்ப் பணி மென்மேலும் சிறந்து விளங்கி, சிகரத்தைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ச.முத்துவேல் சொன்னது…

முனைவர் மு.இ,

விருது குறித்த செய்தி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் அரும்பணிக்கு இது போல இன்னும் பல விருதுகள் வழங்கப்பட வேண்டும்.


தங்கள் தமிழ்ப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

thoaranam சொன்னது…

வாழ்த்துகள்
தொல்காப்பியர் விருது தங்களுக்குக் கிடைத்ததில் மிகு உவகை கொள்கிறோம். இவ்விருதும் தமிழக அரசபை அரியாசனத்துக்கே போய்விடுமென நினைத்திருந்த எம்மைப் போன்றவர்களுக்கு மகிழ்வூட்டிய அறிவிப்பாக இருந்தது. தொல்காப்பியம் கண்ட தமிழ் மொழி உறவாடல் மொழியாக அனைத்துத் துறைகளிலும் இடம்பெற தாங்கள் அயராது தொண்டாற்றவேண்டுமென வாழத்துகிறோம்!!
- முகிலன்
தோரணம்

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ சொன்னது…

அன்புள்ள நண்பர்
மு இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்

மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு தொல்காப்பியர் விருது, அதுவும் குடியரசுத்தலைவர் அவர்கள் கையால் கிடைக்கப்பெற இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி,
வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ