நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

முதுமுனைவர் இராமர் இளங்கோ அவர்கள்


பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்கள்

முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் பாரதிதாசன் ஆய்வுகளின் முன்னோடியாக விளங்குபவர். எடுக்கும் செயலை மிகச்சிறப்பாகச் செய்து முடிக்கும் வினையாண்மை உடையவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்புநிலைப் பேராசிரியராகவும், பதிப்புத்துறைப் பொறுப்பாளராகவும் இருந்து திறம்படத் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனத்தை ஒரு குறுகிய மனப்பான்மைகொண்டு நடத்தாமல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமாக மாற்றிக் காட்டியவர். இவர் காலத்தில்தான் அலெக்சாண்டர் துபியான்சுகி (உருசியா), பேராசிரியர் கா.சிவத்தம்பி (இலங்கை), முனைவர் முரசு. நெடுமாறன் (மலேசியா) எனப் பன்னாட்டு ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு மாற்றிக்காட்டினார்.

பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்கள் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியபொழுதுதான் நானும் முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களும் ஆராய்ச்சி உதவியாளர்களாகப் பணியில் இணைந்தோம். எங்களுக்கு முதன்முதல் அரசுப் பணி வாய்ப்பு வழங்கிய பெருமகனார் இவர். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பினை இங்குப் பதிவதில் மகிழ்கின்றேன்.


முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்கள் தேனி மாவட்டம் ஆனைமலைப்பட்டியில் வாழ்ந்த திருவாளர்கள் சுருளி, வீரம்மாள் ஆகியோரின் அன்பு மகனாக 10.09.1944 ஆம் ஆண்டு பிறந்தவர். இளமைக்கல்வி இராயப்பன்பட்டியிலும், புகுமுக வகுப்பை உத்தமபாளையத்திலும் நிறைவு செய்தவர். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக இளங்கலை(1965–68), முதுகலை (1968– 70), முனைவர் (1970 – 76) பட்டங்களைப் பெற்றவர்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் முதலில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் பட்டத்தை (டி.லிட்) 24.04.90 ஆம் ஆண்டில் பெற்றவர்.

பேராசிரியரின் குடும்பம்:

பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்களின் துணைவியார் பேராசிரியர் இராஜாமணி  அவர்கள் ஆவார். இவர்களின் இல்லற வாழ்வில் இரண்டு பெண்மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதலாமவர் மருத்துவர் இசையமுது இளங்கோ, இரண்டாமவர் பொறியாளர் மஞ்சு இளங்கோ.

ஆய்வுப்பணிகள்:

ஆய்வுத்துறையில் ஈடுபட்டு இளநிலை ஆய்வாளர் நிதி உதவி பெற்றவர்(1970 டிசம்பர் முதல் 1974 வரை) (பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு). பல்கலைக்கழக நல்கைக் குழுவின் வழி நிஜலிங்கப்பா கல்லூரியில் (பெங்களூர்) குறுங்கால ஆய்வுத் திட்டம்(1978) மேற்கொண்டவர். இணை நிலை ஆய்வாளராகப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிதி உதவி பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்தவர்.

ஆய்வாளராக இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டவர் (மைசூர்)15.10.91 முதல் 14.10.92 வரை.

ஆய்வுத் தலைப்புகள்:

முனைவர் பட்டம்- பாரதிதாசன் கதைப் பாடல்கள்

முது முனைவர் பட்டம்- பாரதிதாசன் படைப்புகள்
(பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு)
-
பாரதிதாசன் நாடகங்கள்-இந்திய மொழிகள் நடுவண் நிறுவன ஆய்வாளர்- பாரதிதாசன் கவிதை நடை- பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு குறுங்கால ஆய்வுத் திட்டம்-பாரதிதாசன் காலமும் கவிதையும்

வெளியீடுகள்

நூல்கள்- 14
தொகுப்பு நூல்கள்- 21
ஆய்விதழின் ஆசிரியர்- 02
செய்தி இதழ் ஆசிரியர்- 02
ஆய்வுக் கட்டுரைகள்- 09


கற்பித்தலில் அனுபவம்:

துணைப் பேராசிரியர், அரசு திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி, குடியேற்றம். - 18.07.1970 - 11.09.1970. (1979 – 1984 துறைத் தலைவர், நிஜலிங்கப்ப கல்லூரி, பெங்களூர்


ஆட்சித்திற அனுபவம்:

இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை.-16.10.1994 - 31.01.2002


இயக்குநர் (பொ.),
தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுசார் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.- 03.07.2003 - 31.07.2004

பதிப்புத்துறை அலுவலர்,
சென்னைப் பல்கலைக்கழகம் -01.08.2002 - 31.07.2004

வருகைதரு பேராசிரியர்,
பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு -
அண்ணா பொதுவாழ்வியல் மையம்
சென்னைப் பல்கலைக்கழகம்- 03.12.2004 - 02.03.2005

பேராசிரியர் - தலைவர்,
பாரதிதாசன் உயராய்வு மையம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620 024

இயக்குநர் - பதிப்புத்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620 024- 2005 - 2010

கல்வித்துறை சார்ந்த உள்நாட்டு - வெளிநாட்டுப் பங்கேற்புகள்


பேராளர், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடுஇ மதுரை.1981
குடி அரசு இதழில் பாரதிதாசன் படைப்புகள்

பேராளர், ஆறாவது உலகத்தமிழ் மாநாடு,கோலாலம்பூர், மலேசியா.1987 பாரதிதாசனின் படிநிலை வளர்ச்சி,

பேராளர், தமிழ் இலக்கியக் கருத்தரங்கம், சிங்கப்பூர்.1987
தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதிதாசன்,

பேராளர், எட்டாவது உலகத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்.1995, நகர தூதனில் பாரதிதாசன் படைப்புகள்

இரண்டாம் மொழி கற்பித்தல் பாடநூல் தயாரித்தல் (மதியுரைஞர் வள அறிஞர்), ஜெர்மனி IBF அழைப்பு, 26.06.2000 17.07.2000

அறக்கட்டளைச் சொற்பொழிவு:

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை
சென்னைப் பல்கலைக்கழகம்,22, 23, 24.04.1992

பேரா. தண்.கி. வேங்கடாசலம் அறக்கட்டளை
பெங்களூர், 19.03.1986 - 20.12.1993

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,
காந்திகிராமப் பல்கலைக்கழகம்,1996

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,1997

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், 1998

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை
புதுவைப் பல்கலைக்கழகம்,2007

சிறப்புகள் / பரிசுகள்:

1978 ஆம்ஆண்டு ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் பற்றி ஆய்வு செய்தமைக்காக மறைந்த முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் பாராட்டி சிறப்புச் செய்தமை.

பாரதிதாசன் பற்றிய சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழக அரசின் பரிசு, 1978.

தமிழ் வளர்ச்சித்துறை 1979 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு.

28.04.1991 தமிழக அரசு நடத்திய பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் பாவேந்தர் பற்றி ஆய்வு செய்தமைக்காகச் சிறப்பிக்கப் பெற்றமை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், வண்ணைத் தமிழ்ச்சங்கம், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முதலிய அமைப்புகள் நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் (1990 - 91) பாரதிதாசன் பற்றி ஆய்வு செய்தமைக்காகச் சிறப்பிக்கப் பெற்றமை.

தமிழக அரசு 2002 ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதை (ரூ. 1 இலட்சம் காசோலை மற்றும் ஒரு பவுன் பதக்கம்) 17.09.2004 அன்று நடைபெற்ற அரசு விழாவில் வழங்கிச் சிறப்புச் செய்தமை.

சாகித்திய அகாதமி, சி.பா. ஆதித்தனார் ஆகிய இலக்கிய அமைப்பு படைப்பாளர்களுக்கு வழங்கும் விருதுகளைத் தெரிவுசெய்யும் குழுவில் இருந்தமை.

உறுப்பினர்:

பேரவை, ஆட்சிக்குழு, தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர், 1994 முதல் 2002 வரை.

பேரவை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி, 2005 முதல் 2010 வரை.



வெளியிட்ட நூல்கள்:

பாரதிதாசன் கதைப் பாடல்கள்
தமிழ்மணிப் பதிப்பகம்
சென்னை.1978

பாரதிதாசன் இலக்கியம்
பூம்புகார் பதிப்பகம், சென்னை.1978

பாரதிதாசன் ஒரு நோக்கு
சிந்தனையாளர் பதிப்பகம், சென்னை,1981

குடிஅரசு இதழில் பாரதிதாசன் பாடல்கள்
அகரம், சிவகங்கை,1982

பாரதிதாரசன் பார்வையில் பாரதி
அன்னம்,சிவகங்கை,1984

பாரதிதாசன் படைப்புக் கலை
அகரம்,சிவகங்கை,1984

பாரதிதாசன் நாடகங்கள் ஓர் ஆய்வு
ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.1990

பாரதிதாசன் திருக்குறள் உரை,
பாரி நிலையம்,சென்னை.1992

நகர தூதனில் பாரதிதாசன் படைப்புகள்
முல்லைப் பதிப்பகம், சென்னை.1995

பாரதிதாசன் தலையங்கங்கள்
NCBH,சென்னை.1995

பாரதிதாசன் பார்வையில் பாரதி (இ.ப.)
சாளரம் பதிப்பகம், சென்னை.2005

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிதாசன்
பாரி நிலையம்,சென்னை.2011

புரட்சிக் குயில் பாரதிதாசன்
சாளரம் பதிப்பகம், சென்னை. (அச்சில்)2011

பாரதிதாசனின் கவிதை நடை
பாரி நிலையம்,சென்னை. (அச்சில்),2011


பாரதிதாசன் பற்றிய தொகுப்பு ஃ பதிப்பு நூல்கள்

தலைமலை கண்ட தேவர்
பூம்புகார் பதிப்பகம்இ சென்னை.1978

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?1980

பொங்கல் வாழ்த்துக் குவியல்,1980

ஏழைகள் சிரிக்கிறார்கள்,1980

சிரிக்கும் சிந்தனைகள்,1981

கேட்டலும் கிளைத்தலும்,1981

பாட்டுக்கு இலக்கணம்,1981

கோயில் இரு கோணங்கள்,1981

பாரதிதாசன் பேசுகிறார்,1981

மானுடம் போற்று,1983

உலகுக்கோர் ஐந்தொழுக்கம்,NCBH,. சென்னை,1994

பாரதிதாசனின் புதிய நாடகங்கள்,1994

உலகம் உன் உயிர்,1994

இலக்கியக் கோலங்கள்,1994

பாரதியாரோடு பத்தாண்டுகள்,பாரி நிலையம்,சென்னை,1992

பாரதிதாசனின் புதினங்கள்,1992

சான்றோர் பார்வையில் பாரதிதாசன்,முல்லைப் பதிப்பகம், சென்னை,1995

எஸ். முத்துசாமி பிள்ளை நீதிக்கட்சி வரலாறு, முல்லை நிலையம், சென்னை,1995

பாரதிதாசன் தமிழ் இலக்கிய ஆளுமை (கருத்தரங்கம்)

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி,2007

பல்கலைக்கழகம் போற்றிய பாரதிதாசன் (கருத்தரங்கம்)
பாரதிதாசன் பல்கலைக்கழகம்இ திருச்சிராப்பள்ளி,2008

பாரதிதாசனின் கடிதங்கள் (இணை ஆசிரியர்),2008

டாக்டர் மு. வ. கட்டுரைத் திரட்டு,பாரி நிலையம்,2011,அச்சில்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்(ஆய்வும் பதிப்பும்),பாரி நிலையம்,2012

இதழ்கள்:

1.தமிழியல்,அரையாண்டு இதழ்,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்இ சென்னை,(1994- 2002)

2.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செய்திக் கதிர்,
காலாண்டு இதழ்,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (1994 - 2002)

3.அறிவியல் தொழில்நுட்ப இதழ்,அரையாண்டு இதழ்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,2007 - 2010

4.பாரதிதாசன் பல்கலைக்கழச் செய்திமடல்
அரையாண்டு இதழ்,2005 - 2010



காப்பியம் கதைப்பாடல் ஆன கதை
காஞ்சி, காஞ்சிபுரம்
09.07.1972, 12.07.1972

காப்பியம் கதைப்பாடல் ஆன கதை
சத்தியகங்கை, சென்னை,சூலை 1972

காப்பிய உருவாக்கம்,முத்தாரம், சென்னை
மே 1972, ஏப்ரல் 1979


பாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - கலை
விடுதலை, சென்னை,ஏப்ரல் 1979

பாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - ஓவியம்
தென்னகம், சென்னை, ஏப்ரல் 1979

எதிர்பாராத முத்தம்,தென்னகம், சென்னை, ஏப்ரல் 1979

திருமுன் படைத்தல்,தமிழரசு, சென்னை,ஏப்ரல் 1979

பாரதிதாசன் பாடல்களில் பாடவேறுபாடு,தென்மொழி, சென்னை
மே- சூன், சூலை - செப்டம்பர் 1980

பாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - இசை
உதயக்கதிர், சென்னை, ஏப்ரல் 1980

தற்போதைய பணி:
சிறப்புநிலைப் பேராசிரியர்,
தமிழ்ப்பேராயம்,
திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம்
காட்டாங்குளத்தூர் - 603 203

முகவரி:
முனைவர் இராமர் இளங்கோ,
பி3, சுங்கவரி கலால் அலுவலர்கள் குடியிருப்பு
75, தேவாலயம் சாலை, பெருங்குடி,
சென்னை - 600 096.


தொடர்பு எண்கள்:
செல்பேசி : 94444 94941

தொலைபேசி:(அ)044-2741 7378, (வீ) 044-4280 3828

6 கருத்துகள்:

கல்விக்கோயில் சொன்னது…

சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் அய்யா.

PRINCENRSAMA சொன்னது…

தமிழறிஞர்களின் விக்கிபீடியாவாக இத்தளம் வளர்ந்துகொண்டுள்ளது. :)

Thozhirkalam Channel சொன்னது…

உங்கள் பதிவுகள் பலரையும் சென்று சேர
தமிழ்பதிவர்கள் திரட்டியில் இணையுங்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன்... எத்தனை எத்தனை சிறப்புக்கள்... மிக்க நன்றி சார்...

ratchagan சொன்னது…

இன்று (10.09.12)பிறந்தநாள் காணும் முதுமுனைவர் இராமர் இளங்கோ அய்யா அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் உங்களின் பதிவுஅமைந்துள்ளமை பாராட்டுக்குரியது

ratchagan சொன்னது…

இன்று (10.09.12) பிறந்தநாள் காணும் முதுமுனைவர் இராமர் இளங்கோ அய்யா அவர்களைக் குறித்த தகவல்களை நேர்த்தியாகத் திரட்டி அளித்தமைக்காக உளம் நிறைந்த வாழ்த்துகள்.