
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும் புகழ்பெற்ற பல நாட்டுப்புற ஆய்வு நூல்களை எழுதியவருமான முனைவர் துளசி.இராமசாமி அவர்கள் எழுதிய பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே என்னும் நூல்வெளியீட்டு விழா சென்னை கன்னிமாரா நூலகத்தில் 16.09.2012 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முனைவர் விசய வேணுகோபால் அவர்கள் நூலை வெளியிடவும், கவிஞர் பல்லடம் மாணிக்கம், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர் கனல்மைந்தன், பேராசிரியர் பெருமாள்முருகன், முனைவர் மே.து.இராசுகுமார்,முனைவர் ப.கிருட்டினன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக