நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 9 ஜனவரி, 2012

முதுபெரும் தமிழறிஞர் அடிகளாசிரியர் மறைவு


பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள்

முதுபெரும் தமிழறிஞரும் இந்தியக் குடியரசுத்தலைவரிடம் செம்மொழித் தொல்காப்பியர் விருது பெற்றவருமான பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் தம் 102 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். விழுப்புரம் மாவட்டம் கூகையூரில் வாழ்ந்த பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் 08.01.2012 இரவு 11 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். தமிழறிஞரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், அவரின் மாணவர்களுக்கும், அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை அறிய இங்கே சொடுக்குக.

தொடர்புக்கு: முனைவர் அ.சிவபெருமான்
94430 99936

10 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

வருத்தமான செய்தி.

வேந்தன் அரசு சொன்னது…

எம் ஆழ்ந்த இரங்கல்

தமிழ் படித்தால் நூறாண்டு வாழலாமுனு அறிந்தேன்

Rathnavel Natarajan சொன்னது…

எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

dr.ka.thamizhamallan சொன்னது…

தமிழ் இலக்கணப் புலமையிற்சிறந்து விளங்கிய அடிகளாசிரியர் மறைவு மிகுந்த வருத்தம எம் ஆழ்ந்த இரங்கல்
Dr. ka.thamizhamallan

முகவை மைந்தன் சொன்னது…

:-(

முகவை மைந்தன் சொன்னது…

:-(

rinshad4u சொன்னது…

வருத்தமான செய்தி.

rinshad4u சொன்னது…

வருத்தமான செய்தி.

.kavi. சொன்னது…

வாழும் அறிஞர்களை வாழ்த்தும் குணம், மிகக் குறைவான தமிழரிடமே உண்டே.

செம்மொழி விருது பெற்று குறுகிய காலத்திலேயே அறிஞர்களை இழப்பது வருத்தமே.

.கவி.

muthupalaniappan சொன்னது…

thamilaiye uyiravagavum