நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 டிசம்பர், 2011

“தானே” வந்து தானே ஓய்ந்தது…




புதுச்சேரியில் தானே புயலின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. 30.12.2011 அதிகாலை 2.30 மணியிலிருந்து காலை 10 மணி வரை புயல்காற்றின் முற்றுகையில் புதுச்சேரி இருந்தது. மழையும் இடைவிடாது பெய்ததால் மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

விடியற்காலம் 5 மணி அளவில் ஒரு பதிவு எழுதினேன். அதன் பிறகு மின்சாரம் இல்லாததால் இன்றுதான் கணினியை இயக்க முடிந்தது. இதுவரை 10 பேர் உயிர் இழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக இருந்த பழைமையான மரங்கள் யாவும் சாய்ந்தன. மின்சாரம் பல பகுதிகளில் இல்லை. சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

நேற்று இரவு வரை வீட்டில் இருந்த மக்கள் இன்று வெளியே நடமாடத் தொடங்கியுள்ளனர். கடைகள் எதுவும் திறக்கவில்லை. எனவே உணவுக்குப் பலரும் திண்டாடினர். புத்தாண்டுக்கு வெளியூரிலிருந்து வந்துள்ள சுற்றுலாக்காரர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இந்த ஆண்டு அமைந்துவிட்டது.

கடற்கரையில் கடுமையான காற்று வீசியதால் கருங்கற்களைத் தூக்கிவந்து கடற்கரைச் சாலையில் போட்டது. தென்னை மரங்களின் தலையை முறித்துப் போட்டது. காற்று சில வீடுகளின் கூரைகளைப் பெயர்த்துச்சென்றது. தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி மாடிகளில் வைத்துள்ளது. தென்னை மரத்தில் முற்றிய நெற்றுகள் கீழே விழுந்து தண்ணீரில் மிந்ததன. தெருக்கள்தோறும் தேங்காய்களைப் பார்க்கமுடிந்தது. தண்ணீரில் கழிவுநீர் சில இடங்களில் கலந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை இன்று வீட்டிலிருந்து மக்கள் இறைத்து வருகின்றனர். சாலைகள் இன்னும் முழுமையாகப் போக்குவரவுக்குத் தயாரகவில்லை. பால் விலை நேற்று இரு மடங்கானது.

பள்ளிகள்,கல்லூரிகள் விடுமுறை என்பதால் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகவில்லை. புதுச்சேரியில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க ஆள் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையைத் "தானே" புயல் பாதித்துவிட்டது.

1 கருத்து:

சசிகலா சொன்னது…

அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .