நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 3 நவம்பர், 2011

புதுச்சேரியில் தமிழ்மாமணி மன்னர்மன்னன் பிறந்தநாள் விழா!


கோ.பாரதி, மு.முத்து, அ.அறிவொளி, மன்னர்மன்னன்,
தொழிலதிபர் சிவக்கொழுந்து, துபாய் குழந்தை

  புதுச்சேரியில் உள்ள புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் இன்று (03.11.2011) மாலை 6.30 மணிக்குப் பாவேந்தரின் மகன் தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் பிறந்தநாள் விழாவும் நூல்கள் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தன.

  புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் மு.முத்து அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் அ.அறிவொளி அவர்கள் கலந்துகொண்டு தமிழ்மாமணி மன்னர்மன்னன் எழுதிய பொன்னேடுகள், கோ.பாரதி எழுதிய சுடர்மணிகள் என்னும் இரண்டு நூல்களை வெளியிட, சப்தகிரி நிறுவனங்களின் நிறுவனர் திரு.சிவக்கொழுந்து அவர்களும், திரு. துபாய் குழந்தை அவர்களும் நூலின் படிகளைப் பெற்றுக்கொண்டனர். கவிஞர் கோவிந்தராசு, சொல்லாய்வுச் செல்வர் சு.வேல்முருகன், சுந்தர.இலட்சுமி நாராயணன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர். புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1 கருத்து:

முனைவர் ப. சரவணன், மதுரை. சொன்னது…

ஐயா தங்கள் பதிவின் வழியாக அந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதாகவே உணர்கின்றேன். நன்றி.