நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 28 நவம்பர், 2011

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் - அரிய படம்


கங்கை கொண்ட சோழபுரம்(1930)இல் கிருட்டினசாமி அரங்கசாமி ஐயங்கார் அவர்களால் எடுக்கப்பட்ட அரிய படம்

நன்றி: இந்து நாளிதழ்(28.11.2011)

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அண்மைக்காலமாகச் செல்வபவர்கள் அங்குள்ள புல்வெளிகளையும் பூந்தோட்டங்களையும் கண்டு மகிழ்வார்கள். கோட்டைச்சுவர்கள் திருத்தமாக இருப்பது கண்டு வியப்பார்கள். ஆனால் முப்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் கோயிலில் நெருஞ்சிமுள்ளும், புல்புதர்களுமாக இருந்ததை ஊர்க்காரர்கள் அறிவார்கள். அங்கு நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா, மார்கழித்திருவாதிரை விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மக்கள் கூடுவார்கள். தஞ்சாவூர் கரகாட்டம் உள்ளிட்டவை சிறப்பாக நடக்கும்.கோயிலைச்சுற்றி நடக்கும் கரகாட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடக்கும்.

இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் நீங்கள் கேட்டவை என்ற திரைபடம் எடுக்க இங்கு வந்தபொழுது கங்கைகொண்ட சோழபுரம் கோயில் திரை வழியாக வெளியூர் மக்களுக்குத் தெரியத்தொடங்கியது. அதன் பிறகு மறுமலர்ச்சி, சங்கமம், பதவிப்பிரமாணம் உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்ட பிறகு கோயிலுக்கு சுற்றுலாக்காரர்களின் வருகை அதிகரித்தது. வெளிநாட்டினரும் பெருமளவு வருகின்றனர்.

கோயிலின் முன்புறமும், பக்கப்பகுதிகளும் இன்று தொல்பொருள் ஆய்வுத்துறையின் வழிகாட்டலுடன் செப்பம் செய்யப்பட்டுள்ளன.முன்பு ஆட்சியராகப் பணிபுரிந்த திரு. கோசலராமன் இ.ஆ.ப. அவர்களும் வருவாய் வளர்ச்சி அலுவலர் திரு.செந்தில்குமார் அவர்களும் இந்தக் கோயிலை அழகுபடுத்தும் முயற்சிக்குத் தோற்றுவாய் செய்தனர். முதற்கட்டமாகக் கோயிலை அடைத்திருந்த வீடுகள்,குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன.புதிய வீடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் உயரமாகக் கட்ட தடைவிதிக்கப்பட்டன.படிப்படியே பூங்காக்கள் அமைக்கும் முயற்சி விரிவடைந்தது.

கோயிலைச்சுற்றி கோபுரத்தை மறைக்கும் மதில்கள் இருந்ததாக நான் செவி வழியாக அறிந்தது உண்டு. அத்தகு படம் ஒன்று கல்கத்தா காட்சியகத்தில் இருப்பதாகவும் அறிகின்றேன். இதற்கிடையில் இன்று இந்து நாளிதழில் 1930 இல் எடுக்கப்பெற்ற ஓர் அரிய படம் கண்டேன். அனைவரின் பார்வைக்கும் இதனை வைக்கின்றேன்.

3 கருத்துகள்:

மாதேவி சொன்னது…

அரிய படம் காணக் கிடைத்தது.
மிக்க நன்றி.

rajamelaiyur சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
arasan சொன்னது…

நான் நிறைய முறை சென்றிருக்கிறேன் ,,, 'இப்போதான் இந்த மாதிரி அரிய படத்தை காண்கிறேன் நன்றிங்க சார்