நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 28 செப்டம்பர், 2011

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் முத்தொள்ளாயிரம் ஆங்கில மொழிபெயர்ப்பு Red Lilies and Frightened Birds அறிமுக விழா

புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் முத்தொள்ளாயிரம் ஆங்கிலமொழிபெயர்ப்பு நூலினை Red Lilies and Frightened Birds என்னும் பெயரில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் அறிமுக விழா 09.10.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் விழாவுக்கு முனைவர் க.பஞ்சாங்கம் தலைமை தாங்குகின்றார். முனைவர் த.செங்கதிர் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

முனைவர் நிர்மல் செல்வமணி, முனைவர் ய.மணிகண்டன், முனைவர் தங்க.செயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

முனைவர் அரிமாப்பாமகன் வாழ்த்துரை வழங்குகின்றார்.

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஏற்புரையாற்றுகின்றார்.
நன்றியுரை த.விண்மீன் பாண்டியன்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானகப் பதிப்பகத்தினர் செய்துள்ளனர்.

தொடர்புக்கு:

வானகப் பதிப்பகம்,
7, 11 ஆம் குறுக்கு, ஔவை நகர்,
புதுச்சேரி - 605 008
பேசி: 0413- 2252843

நூலின் விலை: 299-00

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்லதொரு இலக்கியப் பணி..

சிறக்க வாழ்த்துக்கள்..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்லதொரு இலக்கியப் பணி..

சிறக்க வாழ்த்துக்கள்..