
தலைமையுரையாற்றும் கல்லூரியின் தாளாளர் சண்முகநாதன்

தொடக்க விழா
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(17.04.2011) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. கல்லூரித்தாளாளர் இர.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் கு.முத்துக்குமரன் நோக்கவுரையாற்றினார். கல்லூரி விரிவுரையாளர் இராச்மோகன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சி பற்றி அறிந்தனர்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினார். உணவு இடைவேளைக்குப் பிறகு செய்முறை பயிற்சி நடைபெறுகிறது....

பயிற்சி பெறும் மாணவிகள்

பயிற்சி பெறும் மாணவர்கள்
2 கருத்துகள்:
நன்றி ஐயா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக