நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் “கரிகாற்சோழன் விருதுக்குத்” தேர்வானோர் பெயர் அறிவிப்பு...



தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பில் வழங்கப்படும் கரிகாற்சோழன் விருதுகள் பெறும் தகுதியாளர்களை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் இவ்விருதுக்குச் சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் படைப்புகள் வரவேற்கப்பட்டுத் தகுதியான படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் கரிகாற்சோழன் விருது வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு முதல் கூடுதலாக இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர் ஒருவருக்கும் இவ்விருது சேர்த்து வழங்கப்படும் என முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு எம்.ஏ. முஸ்தபா அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


போட்டி முடிவுகள்:

1. மலேசியாவுக்கு வழங்கப்படும் விருது மறைந்த திரு. செ. சீனி நைனா மும்மது எழுதிய தொல்காப்பியக் கடலின் ஒரு துளி கட்டுரைக்கும்,

2. சிங்கப்பூர் எழுத்தாளர் திரு. சித்தூராஜ் பொன்ராஜ் எழுதிய மாறிலிகள் சிறுகதைக்கும்,

3. இலங்கையைச் சேர்ந்த திரு. மு. சிவலிங்கம் அவர்கள் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை என்ற புதினத்துக்கும் வழங்கப்படுகிறது. 

குறிப்பு: விருது வழங்கப்படும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை

சிங்கப்பூர்

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீட்டு விழா




பொறியாளர் சோ. இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு என்ற நூலும் எழுத்தாளர் கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே என்ற நூலும் தஞ்சாவூரில் வெளியிடப்பட உள்ளன. சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.


நாள்: 18.12. 2016(ஞாயிறு), நேரம்: மாலை 5 மணி

இடம்: ஐசுவர்யா மகால், மருத்துவக் கல்லூரிச் சாலை, இராசப்பா நகர், தஞ்சாவூர்

தலைமை: நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள், நீதிபதி,உயர்நீதி மன்றம், சென்னை

வரவேற்புரை: எழுத்தாளர் எம். எம். அப்துல்லா அவர்கள்

வெட்டிக்காடு நூல் வெளியீடு: எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி அவர்கள்

முதல்படி பெறுதல்:
திருமதி ஜெயம் சோமு அவர்கள்
திரு. அ. அப்பாவு அவர்கள், மேனாள் கூடுதல் வணிகவரி ஆணையர்

கீதா கஃபே நூல் வெளியீடு: முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள்
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

முதல்படி பெறுதல்: 
திருமதி பத்மாவதி தனபாலன் அவர்கள்
முனைவர் பழநி. அரங்கசாமி அவர்கள், மேனாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

வெட்டிக்காடு நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

கீதா கஃபே நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள்

ஏற்புரை: பொறியாளர் சோ.இரவிச்சந்திரன் அவர்கள், இயக்குநர், இக்சியா தொடர்பகம், சிங்கப்பூர்
கீதா இரவிச்சந்திரன் அவர்கள் எம்.ஏ.; எம். ஃபில்.

நன்றியுரை: மருத்துவர் வி. தனபாலன் அவர்கள்
வினோதகன் மருத்துவமனை, தஞ்சாவூர்


நிகழ்ச்சி நெறியாளர்: திரு. சுரேகா சுந்தர் அவர்கள்