நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 ஜூலை, 2026

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் சிறப்பு நேர்காணல்

 


 தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இலக்கியத்துறையின் முன்னைத் தலைவரும் மூத்த தமிழறிஞருமான கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, படைப்பு நூல்கள் என்று பன்முக ஆற்றலால் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பெருந்தகையாளர் ஆவார். இவர்தம் கடந்தகால வாழ்வியலை அறிந்துகொள்ள, 25.07.2026 அன்று தஞ்சையில் பேராசிரியரின் “வள்ளுவம்”  இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். தமிழகத்துக்குத் தேவையான தமிழ்க் கல்வி சார்ந்தும், தமிழிலக்கியப் போக்குகள் குறித்தும், தம் கடந்தகால தமிழ் வாழ்வு குறித்தும், தம் ஆசிரியப் பெருமக்கள் குறித்தும் பெருமையோடு உரையாடிய செய்திகளை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றோம். 

 கடல்கடந்த நாடுகளிலும் தமக்கான மாணவச் செல்வங்களைப் பெற்றுத் திகழும் கு.வெ.பா. ஐயாவை நிகர்த்த நற்றமிழ்ச் சான்றோர்களை இற்றைத் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அறிஞர் பெருமகனாரின் அரிய செவ்வியைக் கேட்டுச் சுவைக்குமாறு உரிமையோடு தங்களை வேண்டுகின்றேன்.

காணொலி இணைப்பு

கருத்துகள் இல்லை: