நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
முஸ்தபா தமிழ் அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்தபா தமிழ் அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் “கரிகாற்சோழன் விருதுக்குத்” தேர்வானோர் பெயர் அறிவிப்பு...



தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பில் வழங்கப்படும் கரிகாற்சோழன் விருதுகள் பெறும் தகுதியாளர்களை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் இவ்விருதுக்குச் சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் படைப்புகள் வரவேற்கப்பட்டுத் தகுதியான படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் கரிகாற்சோழன் விருது வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு முதல் கூடுதலாக இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர் ஒருவருக்கும் இவ்விருது சேர்த்து வழங்கப்படும் என முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு எம்.ஏ. முஸ்தபா அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


போட்டி முடிவுகள்:

1. மலேசியாவுக்கு வழங்கப்படும் விருது மறைந்த திரு. செ. சீனி நைனா மும்மது எழுதிய தொல்காப்பியக் கடலின் ஒரு துளி கட்டுரைக்கும்,

2. சிங்கப்பூர் எழுத்தாளர் திரு. சித்தூராஜ் பொன்ராஜ் எழுதிய மாறிலிகள் சிறுகதைக்கும்,

3. இலங்கையைச் சேர்ந்த திரு. மு. சிவலிங்கம் அவர்கள் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை என்ற புதினத்துக்கும் வழங்கப்படுகிறது. 

குறிப்பு: விருது வழங்கப்படும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை

சிங்கப்பூர்

சனி, 20 டிசம்பர், 2014

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நடத்தும் கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு விழா




  திரைப்பா ஆசிரியரும் தமிழ் இலக்கியப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு மிகச் சிறந்த பணிகளைச் செய்தவருமான கவி. கா. மு. ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழா 26.12.2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குச் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெறுகின்றது.

  பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் குமரி அபூபக்கர், முகேஷ் குழுவினரின் இசை அரங்கம் நடைபெறுகின்றது.

  ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரையாற்ற, திருவாளர்கள் வீரபாண்டியன், காவ்யா சண்முகசுந்தரம், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

  தமிழ்வள்ளல் சிங்கப்பூர் எம். ஏ. முஸ்தபா அவர்கள் கவி கா.மு. ஷெரீப் குறித்த நூல்கள், மலர்களை வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். பி. எச். அப்துல் ஹமீது அவர்கள் தொகுப்புரை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும், கலாம் பதிப்பகத்தினரும் செய்துள்ளனர்.


தொடர்புக்கு: 94440 25000

வெள்ளி, 29 நவம்பர், 2013

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் வழங்கப்படும் கரிகாலன் விருதுகள் அறிவிப்பு



தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் தமிழ்வள்ளல் முஸ்தபா அவர்கள் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையை நிறுவிப் பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றார். சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கில்  அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் கரிகாலன் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 

இந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது வழங்கும் விழா 2013 திசம்பர் 14 இல் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ச. சுந்தராம்பாள் எழுதிய பொன்கூண்டு(சிறுகதைத் தொகுப்பு) நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதிய திரிந்தலையும் திணைகள்(புதினம்) நூலுக்கும் இந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் விழாவில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.


விருது வழங்கும் விழாவில் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பேராளர்கள் பத்துப்பேர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையும் செய்துள்ளன.
எழுத்தாளர் ச.சுந்தராம்பாள்

எழுத்தாளர் ச.சுந்தராம்பாள் அவர்கள் மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். 02.02.1953 இல் பிறந்த இவரின் புனைபெயர் சுதா ஆகும். து, 14ம் அகவையில்  மாணவர்களுக்கான கதை, கட்டுரை, கவிதை என எழுதத் தொடங்கிய இவர், இதழ்களுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து எழுதிவருகிறார்.  தது 16-ஆவது அகவையில் சிரிப்பு ஒன்றே போதும்என்ற இவரது சிறுகதை தமிழ் நேசன்இதழில் வெளிவந்தது.  இவரின் தந்தை மா. சதாசிவம்,  இதழாளர் முருகு சுப்பிரமணியம், அப்துல் முத்தாலிப்,  எஸ்.எஸ்.சர்மா இவர்களின் ஊக்குவிப்பும், இலக்கிய வானில் ஒரு துருவ விண்மீனான இவரின் கணவர் எம். ஏ. இளஞ்செல்வன் அவர்களின் ஒத்துழைப்பும் அமைய எழுத்துத்துறையில் சுடர்விடத் தொடங்கினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இவருக்கு முருகு சுப்பிரமணியம்இலக்கிய விருது, தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது.  35 ஆண்டுகளாக மலேசியாவின் தமிழ் இதழ் முகவராக இருந்தவர்.

இப்பொழுது தினக்குரல்நாளிதழின் இயக்குநர்களில் ஒருவராகவும், துணையாசிரியராகவும், ஞாயிறு, மங்கையர் குரல், மாணவர் குரல், பக்தி குரல், தொகுப்பாசிரியராகவும் விளங்குகின்றார்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் சிங்கப்பூரில் 1990 முதல் வாழ்ந்துவருகின்றார். சிங்கப்பூர்ப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். 1995 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள், மொழிபெயர்ப்பு ஆகியதுறைகளில் அனைவரின் கவனத்தையும் பெற்றவர். இணைய இதழ்களில் எழுதி உலகத் தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவரைப் பற்றி மேலும் அறிய இங்குச் செல்க.

படங்கள் உதவி: மலேசிய எழுத்துலகம், விக்கிப்பீடியா