நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
K.S.R.COLLEGE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
K.S.R.COLLEGE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மார்ச், 2009

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையப்பயிலரங்கு

தமிழ் இணையப்பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும். தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும். அவ்வகையில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத் திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது. பல நூறு மாணவர்கள் பயன்பெற உள்ளனர். பயிலரங்கு சிறப்புற அமைய அனைவரும் ஒத்துழைக்கலாம்.

இது போன்ற பயிலரங்குகளை வாய்ப்பிருப்போர் கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்) வழியாக நடத்தித் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கலாம்.

திருச்செங்கோடு பயிலரங்கு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.


இடம்: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு, தமிழ்நாடு

நாள்: 14.03.2009,சனிக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை திரு.மா.கார்த்திகேயன்
தலைமையுரை: முனைவர் நா.கண்ணன்
அறிமுகவுரை : முனைவர் இரா.சந்திரசேகரன்

சிறப்புரை
புலவர் செ.இராசு,ஈரோடு

அமர்வு 1 :
தமிழும் இணையமும்

அமர்வு 2:
முனைவர் இரா.குணசீலன்
வலைப்பூக்கள் உருவாக்கமும் பயன்பாடுகளும்

உணவு இடைவேளை (1.00-2.00)

அமர்வு 3:
முனைவர் மு.இளங்கோவன்
இணைய இதழ்கள்

அமர்வு 4
திரு.சரவணன்
இணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு

அமர்வு 5
முனைவர் த.கண்ணன்
தமிழ் வலைப்பதிவுகள்

முன்பதிவு செய்து கலந்துகொள்ள வேண்டும்.

தொடர்புக்கு:

பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள்
தமிழ்ப்பேராசிரியர்,
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு- 637 215
தமிழ்நாடு

செல்பேசி + 94435 51701
மின்னஞ்சல் tamilchandru@yahoo.com


அழைப்பிதழ்


அழைப்பிதழ்

வியாழன், 22 ஜனவரி, 2009

முதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங்கம்

திருச்செங்கோடு கே.எசு.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் 2009 ஏப்பிரல் மாதம்25,26 இருநாள் நடைபெற உள்ளது.கருத்தரங்கின் மையப்பொருள் செவ்வியல் - மொழிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பதாகும்.கருத்தரங்கில் படிக்கத் தக்க கட்டுரையைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து முதல் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சில் அனுப்பவேண்டும்.

பதிவுக்கட்டணம் பேராசிரியர்கள் 300-00 உருவா.ஆய்வுமாணவர்கள் 200-00 உருவா.

THE PRINCIPAL,K.S.R.COLLEGE OF ARTS AND SCIENCE,TIRUCHENGODE என்ற பெயருக்கு வரைவோலை அமைதல்வேண்டும்

பங்கேற்பாளர்கள் 25.02.2009 நாளுக்குள் பணம்,கட்டுரை அனுப்பிவைக்கவேண்டும்.

தொடர்பு முகவரி:

முனைவர் இரா.சந்திரசேகரன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
கே.எசு.ஆர்.கலை,அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு-637215
தமிழிநாடு,இந்தியா

என்னும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்

செல்பேசி :+91 9443551701
மின்னஞ்சல் : tamilchandru@yahoo.com

மேலும் விவரங்களுக்கு,அழைப்பிதழுக்குக் கல்லூரியின் வலைப்பூவைக் காண்க!