நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 மே, 2011

ஆர்க்காட்டில் தமிழ் இணையம் அறிமுகம்

வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் ஆர்க்காடு கிளையின் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் இணையம் அறிமுக வகுப்பு நடைபெறுகின்றது.

ஆர்க்காடு,சோளிங்கர்,இராணிப்பேட்டை,வாலாசா,வேலூர்,ஆரணி பகுதிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து தமிழ் ஆசிரியர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு, வலைப்பூ உருவாக்கம், இணைய நூலகங்கள், இணையவழித் தமிழ்க்கல்வி உள்ளிட்ட செய்திகளை எடுத்துரைக்க உள்ளார்.

இடம்: ஆர்க்காடு

நாள்: 18.05.2011

நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை

தொடர்புக்கு: கு.வ.மகேந்திரன் பேசி: + 8973038567

கருத்துகள் இல்லை: