சனி, 7 பிப்ரவரி, 2026
நெல்லையில் நடந்த புலமைத் திருவிழா!
புதன், 8 அக்டோபர், 2025
திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி 2025-2026
நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளாகக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்ப்பணியாற்றி வருகின்றது. மாணவர்தம் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தெடுக்கும் வகையில் போட்டிகளை முறைப்படி நடத்தி, வெற்றிபெறுபவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்கின்றது. புலவர் தேர்வு எழுதுபவர்களுக்கு மாலைநேரக் கல்லூரியை நடத்தியது. திங்கள்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்திக் கருத்து விருந்து தருகின்றது. ஆண்டுதோறும் ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகின்றது.
நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் மாணவர்தம் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கில் கடந்த ஐம்பத்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கட்டுரைப்போட்டியை நடத்தி வருகின்றது முதல் தகுதிபெறும் எழுத்தோவியத்தை உருவாக்கும் மாணவமணிக்கு எழுபதாயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கமும் அவர் பயிலும் கல்லூரிக்கு முப்பதாயிரம் மதிப்புடைய த. பி. சொ. அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் வழங்க உள்ளனர்.
இவ்வாண்டுக்குரிய ஆய்வுப்பொருள்:
பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் எழுத்தோவியங்கள்
1. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச்
சார்ந்த கல்லூரிகளில் பயிலும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
2. எழுத்தோவியம் அறுபது பக்கங்களுக்குக் குறையாமலும்
எழுபது பக்கங்களுக்கு மிகாமலும் அமைதல் வேண்டும். ஆய்வு மேற்கோள், நூற்பட்டியல் இறுதியில்
இடம்பெற வேண்டும்.
3. ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, உரை. இலக்கியம்,
இணையம் ஆகிய பல்வேறு துறைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களைக்
குறித்து விரிவாக ஆராய்வது விரும்பத்தக்கது.
4. ஆய்வுக்கட்டுரையை மாணவர் எழுதியதற்கான உறுதிமொழியினை
அவர் பயிலும் கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்ப்பேராசிரியர்களின் கையொப்பத்துடன் அனுப்புதல்
வேண்டும்.
5. ஆராய்ச்சிக்கட்டுரை வந்து சேர்வதற்குரிய இறுதி நாள்: 31.12.2025
கட்டுரையை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
முனைவர் பால் வளன் அரசு,
தலைவர், தனித்தமிழ் இலக்கியக் கழகம்,
3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை
திருநெல்வேலி – 627 002
கைபேசி: 7598399967
முனைவர் மு.இளங்கோவனின் நூல்கள்:
1. மாணவராற்றுப்படை
(1990)
2. பனசைக்குயில்
கூவுகிறது (1991)
3. அச்சக
ஆற்றுப்படை (1992)
4. மராட்டியர்
ஆட்சியில் தமிழகமும் தமிழும் (1994)
5. பாவலர்
முடியரசனாரின் தமிழ்த்தொண்டு(1996)
6. இலக்கியம்
அன்றும் இன்றும் (1997)
7. மணல்மேட்டு
மழலைகள் (1997)
8. வாய்மொழிப்
பாடல்கள் (2001)
9. பாரதிதாசன்
பரம்பரை (2001)
10. பழையன
புகுதலும் (2002)
11. அரங்கேறும்
சிலம்புகள்(2002)
12. பொன்னி
பாரதிதாசன் பரம்பரை (2003)
13. நாட்டுப்புறவியல்
(2006)
14. அயலகத்
தமிழறிஞர்கள் (2009)
15. கட்டுரைக்
களஞ்சியம்(2013)
16. செவ்விலக்கியச்
சிந்தனைப் புதையல்(2013)
17. நாட்டுப்புறக்
கலைகள் (சிங்கப்பூர், பல்கலைக்கழகப் பாடநூல்) 2018
18. தொல்லிசையும்
கல்லிசையும் (2019)
19. இசைத்தமிழ்க்
கலைஞர்கள் (2022)
20. இணையம்
கற்போம் (2023, செம்பதிப்பு)
21. இணைய
ஆற்றுப்படை (2024)
22. தொடரும்
தொல்காப்பிய மரபு(2024)
23. தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம்
(கோலாலம்பூர்) (2025 )
பதிப்பாசிரியர்
1. விடுதலைப்
போராட்ட வீரர் வெ. துரையனார்
அடிகள்(1995)
2. பொன்னி
ஆசிரியவுரைகள் (2004)
3. உலகத்
தமிழ் இணைய மாநாட்டு மலர்
(2014), வெளியீட்டாளர்
4. திருக்குறள்
மொழிபெயர்ப்பு (2016)
5. தமிழச்சி
காமாட்சி துரைராசு பொன்விழா மலர் (2020)
6. மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும் – கருத்தரங்க மலர்(2021)
முனைவர் மு.இளங்கோவனின் வலைப்பதிவு:
http://muelangovan.blogspot.com/
முனைவர் மு.இளங்கோவனின் யுடியூப் முகவரி:
https://www.youtube.com/@Vayalvelithiraikkalam/featured
முனைவர் மு. இளங்கோவன் மின்னஞ்சல் முகவரி:
muetamil@gmail.com






