நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 13 நவம்பர், 2015

பேராசிரியர் மது. ச.விமலானந்தம் அவர்கள் மறைவு!



தஞ்சாவூரில் வாழ்ந்துவந்த பேராசிரியர் மது. ச.விமலானந்தம் அவர்கள் 14. 10. 2015 காலை மறைந்த செய்தியை இன்றுதான் தற்செயலாக இணையத்தில் படித்தேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்பில் இருந்த பெருமகனார் மறைந்த செய்தி எனக்கு மிகப்பெரிய துன்பத்தைத் தந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நானும் பூண்டிக் கல்லூரிப் பேராசிரியர் பாலா அவர்களும் நடு இரவில் ஐயாவைச் சந்திக்க தஞ்சையில் முயன்றும் இயலாமல் போனது.

பேராசிரியர் மது.ச. அவர்கள் சாதி, மதம் கடந்து பழகும் உயர்ந்த உள்ளம் உடையவர். புதுவையில் நான் படித்தபொழுது(1992) எங்கள் அறையில் பலநாள் தங்கி எங்களை ஊக்கப்படுத்திய பெருமகனார் ஆவார். தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் நூலின் வழியாக அவர் என்றும் நம்முடன் இருப்பார்.


பேராசிரியரின் மறைவால் வாடும் குடும்பத்தார், மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

பேராசிரியர் மது. ச. அவர்களின் தமிழ்ப்பணியை அறிவதற்கு இங்குச் செல்லவும்!

2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா