நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 10 ஜூலை, 2015

கோவையில் அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியளிப்பு விழா-2015





  கோவையில் செயல்படும் அரவணைப்பு தொண்டு நிறுவனத்தின் சார்பில், கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதியளிப்பு விழா  12.07.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கோவை இரயில் நிலையம் எதிரில் உள்ள திவ்யோதயா அரங்கில் நடைபெறும் இவ்விழா முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது. 

  பொறியாளர் கு. இளங்கோவன் அவர்கள் அனைவரையும் வரவேற்கின்றார். கு. இளங்கோவன் எழுதிய  A Layman’s Peak- reach என்னும் நூலைக்  காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ந. மார்க்கண்டேயன் அவர்கள் வெளியிடுகின்றார். திருமதி சுப்புலட்சுமி அவர்கள் நூலைப் பெற்றுக்கொள்கின்றார். தவத்திரு மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். திருவாட்டி தேவிகா இளங்கோவன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.