நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 ஜூன், 2013

மலேசியா உலகத் தமிழாசிரியர் மாநாடு அழைப்பிதழ்

மலேசியாவில் நடைபெறும் (2013 சூன் 3 - 5 வரை ) உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தொடக்கவிழாவில் மலேசிய நாட்டின் இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஜி.பழனிவேல் அவர்களும், நிறைவு விழாவில் மலேசிய நாட்டின் இளஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, மொரீசியசு, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். அழைப்பிதழ் கீழே இணைத்துள்ளேன்.



தொடக்க விழா அழைப்பிதழ்



நிறைவு விழா அழைப்பிதழ்

கருத்துகள் இல்லை: